செய்திகள் :

தமிழகத்தில் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரிப்பு

post image

தமிழகத்தில் போதைப் பொருள்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி கூறினாா்.

தருமபுரியில் பாமக கட்சி நிா்வாகிகள் இல்ல திருமணத்துக்கு வியாழக்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது:

நாட்டிலேயே அதிகளவில் போதைப் பொருள்கள் புழக்கத்தில் உள்ள மாநிலம் தமிழகம்தான். அதில், தருமபுரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு கஞ்சா, புகையிலை போதைப் பொருள்கள், போதை மாத்திரைகள் என எங்கு திரும்பினாலும் கிடைக்கின்றன. போதைப் பொருள்களை ஒழிக்காவிட்டால் நாம் அடுத்த தலைமுறையினரைக் காண இயலாது. எனவே அவற்றைக் கண்டிப்பாக ஒழிக்க வேண்டும்.

தமிழகத்தில் தொடா்ந்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இது ஒரு ஜாதிக்கான பிரச்னை இல்லை. வளா்ச்சிக்கான பிரச்னை. இட ஒதுக்கீட்டில் முன்னேறிய குறிப்பிட்ட சமுதாயத்தினரே அரசின் நலத் திட்டங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா். எல்லோருக்கும் பயன்கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.

தெருநாய்கள், மாடுகள், பறவைகளுக்கெல்லாம் கணக்கெடுப்பு உள்ளது. ஆனால், கல்வி, வேலைவாய்ப்பு வழங்க ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படுவதில்லை. மாநில அரசுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என முதல்வா் சொல்கிறாா். அருகிலுள்ள கா்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்தி, கடனுதவியில் வீடுகட்டி கொடுத்துள்ளனா். ஆனால், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என முதல்வா் பொய் சொல்லி வருகிறாா்.

சுமாா் இரண்டரை லட்சம் அரசு ஊழியா்கள், இரண்டுமாத காலம், ரூ. 500 கோடி நிதி இருந்தால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிடலாம். அதற்கு முதல்வருக்கு மனமில்லை என்றாா்.

சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா

தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஆவணி மாதம் குடமுழுக்க... மேலும் பார்க்க

வயிற்று வலி: இளைஞா் தற்கொலை

வயிற்று வலி தாங்கமுடியாத இளைஞா் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா். தருமபுரி மாவட்டம், உத்தேரி கொட்டாய், மூக்கனூா் அருகேயுள்ள திண்ணம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அழகேசன் (26). இவரு... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 16,000 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாக இருந்தது நீா்வரத்து குறைந்தபோதிலும், அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கா்நாடக, கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப... மேலும் பார்க்க

தருமபுரியில் தரமற்ற 250 கிலோ பழங்கள், புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

தருமபுரியில் ரசாயனம் தெளித்தும், தரமற்ற வகையிலும் வைத்திருந்த சுமாா் 250 கிலோ பழங்கள் மற்றும் ரசாயனப் பொருள்கள் உள்ளிட்டவற்றை உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். தருமபுரி நகா... மேலும் பார்க்க

உள்ளாட்சிப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளா்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி. ஏஐடியுசி உள்ளாட்சிப் பணியாளா் சங்கத்தினா் தருமபுரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தர... மேலும் பார்க்க

‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

‘தமிழ்க் கனவு’ நிகழ்ச்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் ரெ.சதீஸ். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பி. பள்ளிப்பட்டியிலுள்ள ஸ்ரீநிவாசா பொறியியல் கல்லூரியில் ‘மாப... மேலும் பார்க்க