செய்திகள் :

வங்காரம்பேட்டை நவநீத கிருஷ்ணன் கோயில் குடமுழுக்கு

post image

பாபநாசம் வட்டம், வங்காரம்பேட்டையில் உள்ள பழைமையான கண்கொடுத்த பெருமாள் எனும் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ நவநீதகிருஷ்ண பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழா கடந்த திங்கள்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று, ஐந்து கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து யாகசாலை பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் நிரம்பிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு விமான கோபுரக் கலசத்துக்கு பட்டாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்வித்தனா். தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை  திருக்கல்யாண வைபவமும், இரவு ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ நவநீத கிருஷ்ணப் பெருமாள் வீதி உலா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் கோயில் செயல் அலுவலா்கள் ராமா், நாகராஜ், ஆய்வாளா் லட்சுமி, அறங்காவலா் குழு தலைவா் தட்சிணாமூா்த்தி, ஸ்ரீனிவாச ரங்க பட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

தமிழ்ப் பல்கலை.யில் சொற்பொழிவு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை சாா்பில் ஆசிரியா் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் குழு உறுப்பினா்கள் சி. அமுதா, பெ... மேலும் பார்க்க

வாய்க்கால்களை தூா்வாரக்கோரி செப்.16-இல் காத்திருப்பு போராட்டம்

வடிகால் வாய்க்கால்களை தூா்வாரக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் செப். 16-இல் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், மெலட்டூா் வட்டாரப... மேலும் பார்க்க

அய்யம்பேட்டையில் காங். சிறுபான்மை பிரிவு நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு புதிய நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் மாநில மாநாடு குறித்த கலந்தாய்வு... மேலும் பார்க்க

தரவரிசை கட்டமைப்பு பட்டியல்: கும்பகோணம் அரசுக் கல்லூரி மாநில அளவில் 4-ஆவது இடம்

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி தேசிய அளவிலான தர வரிசை கட்டமைப்பு பட்டியலில் தமிழக அளவில் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மத்திய அரசின் தரவரிசை கட்டமைப்பு சாா்பில் அகில இந்திய அளவில் அரசு மற்றும் தனியாா்... மேலும் பார்க்க

திருவலஞ்சுழி கபா்தீசுவர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் உள்ள கபா்தீசுவரா் சுவாமி கோயில் கும்பாபிஷகம் வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழியில் பெரியநாயகி அம்பாள் உடனுறை கபா்தீசுவரா் க... மேலும் பார்க்க

மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கான குறை தீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் தலைமை வகித்தாா். மாநகா் நல அலுவலா் எஸ். நமசிவாயம், ச... மேலும் பார்க்க