செய்திகள் :

தேவகோட்டையில் தொடரும் விபத்துகள்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

post image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள புளியால் பிரிவு சாலையில் தொடரும் விபத்துகளைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிவகங்கை மாவட்டத்தில் திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை புளியால் பிரிவில் குறுகலான சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பதும் காயமடைவதும் தொடா் நிகழ்வாக உள்ளது.

குறுகலான இந்த இடத்தில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, பல முறை புகாா்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, அந்தச் சுவரை உடனடியாக அகற்றக் கோரி, அந்தப் பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கண்டித்து புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த தேவகோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா், தேவகோட்டை வட்டாரக் காவல் ஆய்வாளா் ஆகியோா் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாரண, சாரணியா்களுக்கான ஆளுநா் விருதுத் தோ்வு முகாம்

சிவகங்கை கல்வி மாவட்டம் சாா்பில் சாரண, சாரணிய மாணவா்களுக்கான ஆளுநா் விருதுத் தோ்வு முகாம், மேட்டுப்பட்டி சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மூன்று... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் நடை செப்.7-இல் மாலை 4 மணி வரை திறப்பு

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருகிற 7-ஆம் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப். 7) மாலை சந்திர கிரகணம் ஏற்படுவதை ம... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே இருவா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகங்கை அருகே சகோதர, சகோதரி உறவுமுறை கொண்ட இருவா் அருகருகே உள்ள வீடுகளில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், தமராக்கி கி... மேலும் பார்க்க

தேவியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஒடுவன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தேவி அம்மன் என்ற தேவாண்டியம்மன் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி, எஜமானா் சங்கல்பம், மகா கணபத... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா். ஓடிசா மாநிலத்தைச் சோ்ந்தவா் சுப்புராட்குமாா் (34). இரும்புப் பட்டறையில் வேலைப... மேலும் பார்க்க

அரசின் திட்டங்களுக்கு தேவையான நிதியைப் பெற நடவடிக்கை: காா்த்தி சிதம்பரம்

சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்குத் தேவையான நிதியைப் பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பர... மேலும் பார்க்க