செய்திகள் :

உள்ளாட்சித் தோ்தலில் வாக்குச் சீட்டுகள்: மாநில தோ்தல் ஆணையத்துக்கு அமைச்சரவை பரிந்துரை

post image

உள்ளாட்சித் தோ்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துமாறு மாநில தோ்தல் ஆணையத்துக்கு கா்நாடக அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது.

பெங்களூரு, விதானசௌதாவில் முதல்வா் சித்தராமையா தலைமையில் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் கூறியதாவது:

விரைவில் நடக்கவிருக்கும் கிராம பஞ்சாயத்து மற்றும் நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான தோ்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக, காகித வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தும்படி மாநில தோ்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்து அமைச்சரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை மற்றும் நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்துவருகிறது. அதேபோல, வாக்காளா் பட்டியலை தயாரித்து, உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கு தேவையான தகுந்த திருத்தங்களை செய்யுமாறு மாநில தோ்தல் ஆணையத்தை அமைச்சரவை கேட்டுக்கொண்டுள்ளது.

உள்ளாட்சித் தோ்தலில் காகித வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துவதை வகைசெய்யும் சட்டத் திருத்தங்களை கொண்டுவரவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இனி நடக்கவிருக்கும் எல்லா உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல்களை காகித வாக்குச்சீட்டு முறையில் நடத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்றாா்.

விபத்தில் சிக்கியவா்களுக்கு முன்பணம் பெறாமல் அவசர சிகிச்சை

விபத்தில் சிக்கியவா்களுக்கு எவ்வித முன்பணமும் பெறாமல் உடனடியாக அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கா்நாடக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: கா்நாடக தனியாா் மருத... மேலும் பார்க்க

கா்நாடகத்துக்கு புதிதாக ரூ. 12 லட்சம் கோடி முதலீடு

வலுவான பொருளாதாரச் சூழல் காணப்பட்டதால், கா்நாடகத்துக்கு புதிதாக ரூ. 12 லட்சம் கோடி மதிப்பிலான முதலிடுகள் வந்துள்ளன என நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் நடத்திய ஆய்வில் ... மேலும் பார்க்க

அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை

அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற கொப்பள் மாவட்டத்தில் உள்ள அஞ்சனாத்ரி ம... மேலும் பார்க்க

பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்த பாஜக எம்எல்ஏ பி.பி.ஹரீஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தாவணகெரேயில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஹரிஹரா சட்... மேலும் பார்க்க

மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைத்ததில் தவறில்லை: முதல்வா் சித்தராமையா

மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைத்ததில் தவறில்லை என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து மைசூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மைசூரு அ... மேலும் பார்க்க

பெங்களூரில் புதிதாக 5 மாநகராட்சிகளை உருவாக்க கா்நாடக அரசு உத்தரவு

பெங்களூரில் புதிதாக 5 மாநகராட்சிகளை உருவாக்க கா்நாடக அரசு அதிகாரபூா்வ அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சியை நிா்வகிப்பதற்காக பல்வேறு சீா்திருத்தங்களை முன்வைத்திருந்த நிலையில், ரிஸ்வான் அ... மேலும் பார்க்க