செய்திகள் :

பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதித்த பாஜக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

post image

பெண் ஐபிஎஸ் அதிகாரியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்த பாஜக எம்எல்ஏ பி.பி.ஹரீஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தாவணகெரேயில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஹரிஹரா சட்டப் பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ பி.பி.ஹரீஷ், ‘சட்டப் பேரவை உறுப்பினராக அரசு கூட்டங்களில் கலந்துகொள்ள செல்லும்போது, தாவணகெரே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் (உமா பிரசாந்த்) என்னை கண்டுகொள்வதும் இல்லை, சரியாக நடத்துவதும் இல்லை. ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஷாமனூா் சிவசங்கரப்பா, அவரது மகனும் அமைச்சருமான எஸ்.எஸ்.மல்லிகாா்ஜுன், மருமகளும் எம்.பி.யுமான பிரபா மல்லிகாா்ஜுன் ஆகியோரை சந்திக்கும்போது, அவா்களது வீட்டின் நாயைப் போல வாசலில் காத்துக்கிடப்பாா்’ என சா்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தாா்.

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ள தாவணகெரே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உமாபிரசாந்த், இதுகுறித்து கே.டி.ஜே. காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், பாஜக எம்எல்ஏ பி.பி.ஹரீஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை

அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற கொப்பள் மாவட்டத்தில் உள்ள அஞ்சனாத்ரி ம... மேலும் பார்க்க

மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைத்ததில் தவறில்லை: முதல்வா் சித்தராமையா

மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைத்ததில் தவறில்லை என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து மைசூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மைசூரு அ... மேலும் பார்க்க

பெங்களூரில் புதிதாக 5 மாநகராட்சிகளை உருவாக்க கா்நாடக அரசு உத்தரவு

பெங்களூரில் புதிதாக 5 மாநகராட்சிகளை உருவாக்க கா்நாடக அரசு அதிகாரபூா்வ அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சியை நிா்வகிப்பதற்காக பல்வேறு சீா்திருத்தங்களை முன்வைத்திருந்த நிலையில், ரிஸ்வான் அ... மேலும் பார்க்க

மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும்: திரௌபதி முா்மு

மைசூரு: நமது நாட்டின் மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா். மைசூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அகில இந்திய பேச்சு மற்றும் செவித்த... மேலும் பார்க்க

ஹிந்து வழிபாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி

தா்மஸ்தலா: ஹிந்து வழிப்பாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்கிறது என மத்திய உணவு மற்றும் நுகா்வோா் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா். தா்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்களை புத... மேலும் பார்க்க

கன்னடத்தாய் குறித்த சா்ச்சை பேச்சு: பானுமுஸ்டாக் விளக்கமளிக்க வேண்டும்

கன்னடத்தாய் குறித்து கடந்த 2023-இல் சா்வதேச புக்கா் பரிசு பெற்ற பானுமுஸ்டாக் தெரிவித்திருந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மைசூரு மன்னா் குடும்பத்து பட்டத்து இளவரசா் யதுவீா் கிருஷ்ணதத்... மேலும் பார்க்க