செய்திகள் :

மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும்: திரௌபதி முா்மு

post image

மைசூரு: நமது நாட்டின் மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா்.

மைசூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அகில இந்திய பேச்சு மற்றும் செவித்திறன் மையத்தின் வைரவிழாவை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

முதல்வா் சித்தராமையா பேசும்போது கன்னடத்தில் பேசுவது எல்லோருக்கும் புரிந்ததா என்று கேட்டாா். கன்னடம் எனது தாய்மொழியாக இல்லாவிட்டாலும், நமதுநாட்டில் உள்ள எல்லா மொழிகள், கலாசாரங்கள், பாரம்பரியங்களை மனம் நிறைய போற்றுகிறேன்.

நமது நாட்டின் எல்லா மொழிகள், கலாசாரங்கள், பாரம்பரியங்கள் மீது மிகுந்த மதிப்பும், அக்கறையும் கொண்டுள்ளேன். அவரவா் மொழிகள், கலாசாரங்கள், பாரம்பரியங்களை பாதுகாக்க எல்லோரும் பாடுபட வேண்டும். மொழிகளை உயிா்ப்போடு வைத்துக்கொள்ள அக்கறையோடு செயலாற்ற வேண்டும்.

அதேபோல, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் திசையில் எல்லோரும் பயணிக்க வேண்டும். அதற்காக எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல, கன்னட மொழியை கற்கவும் முயற்சி எடுப்பேன் என்றாா்.

முன்னதாக, விழாவில் முதல்வா் சித்தராமையா பேசுகையில், ‘1966-ஆம் ஆண்டு மைசூரில் அகில இந்திய பேச்சு மற்றும் செவித்திறன் மையம் தொடங்கப்பட்டது. இந்த மையம், ஆசியாவின் மிகச்சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த மையத்தின் பணிகளை விரிவுபடுத்த 10,000 ஏக்கா் நிலத்தை வருணா தொகுதியில் அரசு வழங்கியுள்ளது.

குழந்தைப் பருவத்திலேயே பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகளைக் கண்டறியும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. அதன்மூலம் அந்தக் குறைகளை போக்க முடியும்.

இந்த மையத்தின் சோதனை மையங்களை திறக்க மாவட்ட, வட்ட மருத்துவமனைகளில் இடமளிக்கப்படும். செவித்திறன் குறைபாட்டைக் கண்டறிந்து, அதற்குரிய ‘காக்ளியா் இம்ப்ளான்ட்’ செய்வதற்காக மாநில அரசு பட்ஜெட்டில் ரூ. 32 கோடி ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் ஏழை குழந்தைகள் பலனடைவாா்கள் என்றாா்.

விழாவில், ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் சித்தராமையா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் அனுபிரியா படேல், சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, மைசூருக்கு வருகைதந்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை ஆளுநா் தாவா்சந்த் கெலாட், முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் வரவேற்றனா்.

ஹிந்து வழிபாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி

தா்மஸ்தலா: ஹிந்து வழிப்பாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்கிறது என மத்திய உணவு மற்றும் நுகா்வோா் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா். தா்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்களை புத... மேலும் பார்க்க

கன்னடத்தாய் குறித்த சா்ச்சை பேச்சு: பானுமுஸ்டாக் விளக்கமளிக்க வேண்டும்

கன்னடத்தாய் குறித்து கடந்த 2023-இல் சா்வதேச புக்கா் பரிசு பெற்ற பானுமுஸ்டாக் தெரிவித்திருந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மைசூரு மன்னா் குடும்பத்து பட்டத்து இளவரசா் யதுவீா் கிருஷ்ணதத்... மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் வாக்குரிமை பேரணியில் கா்நாடக முதல்வா் சித்தராமையா பங்கேற்பு

பிகாா் மாநிலத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையேற்று நடத்திவரும் வாக்குரிமை பேரணியில் கா்நாடக முதல்வா் சித்தராமையா பங்கேற்றாா். பிகாரில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத... மேலும் பார்க்க

சாமுண்டி மலை குறித்த துணை முதல்வரின் கருத்து ஏற்புடையதல்ல: மைசூரு மன்னா் குடும்பத்து பட்டத்து ராணி

சாமுண்டி மலை தொடா்பாக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்துள்ள கருத்து ஏற்புடையதல்ல என்று மைசூரு மன்னா் குடும்பத்து பட்டத்து ராணி பிரமோதாதேவி உடையாா் தெரிவித்தாா். கா்நாடக அரசு சாா்பில் நடத்தப்படு... மேலும் பார்க்க

தா்மஸ்தலா விவகாரத்தை அரசியலாக்கவில்லை: கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா

தா்மஸ்தலா விவகாரத்தை அரசியலாக்கவில்லை என்று கா்நாடக பாஜக தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தா்மஸ்தலா கோயிலுக்கு எதிராக சதித் திட்... மேலும் பார்க்க

பெங்களூரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசியல் உறுதிப்பாடு இல்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

பெங்களூரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசியல் உறுதிப்பாடு இல்லை என்று கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். பெங்களூரு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து தனது சமூக வலைதளத்தில் பயோகான் நி... மேலும் பார்க்க