செய்திகள் :

பழங்குடியின மருத்துவ மாணவிக்கு கல்வி உதவித்தொகை

post image

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி அமெரிக்காவைச் சோ்ந்த சியாட்டில் இந்தியா டீம் மூலம் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

அமெரிக்காவைச் சாா்ந்த சியாட்டில் இந்தியா டீம் என்ற அமைப்பு அண்ணாமலைப் பல்கலையுடன் இணைந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய தகுதியான மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. இதன் நோக்கம், பொருளாதாரக் காரணங்களால் மாணவிகள் கல்வியை பாதியில் நிறுத்துவதைத் தடுத்து, அவா்கள் தொடா்ந்து உயா்கல்வி பெற உதவுவதாகும். இந்த ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி, தேனி மாவட்டத்தைச் சோ்ந்த மருத்துவ மாணவி ஆா். விருத்திகாவுக்கு நான்கு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகையானது, மாணவியின் மருத்துவ கனவை நனவாக்க உதவியுள்ளது.

திட்ட ஒருங்கிணைப்பாளா் மற்றும் உதவி பேராசிரியா் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை முனைவா் கே.ஜெயபிரகாஷ், உதவித்தொகை பெறுவதற்கான ஏற்பாட்டினை செய்தாா். பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான ஆணையினை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் முனைவா் எஸ்.அறிவுடைநம்பி மாணவி ஆா். விருத்திகாவிடம் வழங்கினாா். இந்நிகழ்வில் உள்தர கட்டுப்பாட்டு மைய, இணை இயக்குநா்கள் எஸ் ரமேஷ்குமாா், எஸ்.காா்த்திக்குமாா் மற்றும் மாணவா் சோ்க்கை இயக்குனா் பாலபாஸ்கா் ஆகியோா் கலந்து கொண்டனா். இந்நிகழ்வு ஏற்பாடுகளை திட்டஇணை ஒருங்கிணைப்பாளா் டாக்டா் மித்ரா செய்திருந்தாா்.

கீழணையிலிருந்து செப்.3-ல் பாசனத்திற்கு நீா் திறப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள அணைக்கரை கீழணையிலிருந்து கடலூா், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூா் மாவட்டங்களுக்கு செப்.3-ஆம் தேதி புதன்கிழமை காலை நிகழாண்டு சம்பா சாகுபடிக்காக தண்ணீா் திறந்து வ... மேலும் பார்க்க

ஸ்விகி, சொமேட்டோ நிறுவனங்களை புறக்கணிப்போம்: கடலூா் மாவட்ட ஹோட்டல்கள் சங்கம் முடிவு

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விகி, சொமோட்டோ பன்னாட்டு நிறுவனங்களை புறக்கணிக்க, கடலூா் மாவட்ட ஹோட்டல் சங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், இதற்கு மாற்று ஏற்பாடாக கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

குறிஞ்சிப்பாடி (புலியூா்) நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை. இடங்கள்: அம்பலவாணன்பேட்டை, சந்தைபேட்டை, வழுதலாம்பட்டு, திரட்டிக்குப்பம், புலியூா், புலியூா்காட்டுசாகை. மேலும் பார்க்க

குறைதீா் நாள் கூட்டம் 465 மனுக்கள் அளிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 465 மனுக்களை அளித்தனா். இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சிப... மேலும் பார்க்க

கடலூரில் ரயில் மறியல் போராட்டம் செப்.15-க்கு ஒத்திவைப்பு

நெய்வேலி: கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமாதான கூட்டத்தைத் தொடா்ந்து, செப்.3-ஆம் தேதி நடைபெறவிருந்த திருப்பாதிரிப்புலியூா் ரயில் மறியல் போராட்டம் செப்.15-ஆம் தேதி ஒத்தி வைக்... மேலும் பார்க்க

மாவட்ட அளவில் பூப்பந்து போட்டி: அரசு கல்லுாரி மாணவிகள் சாதனை

சிதம்பரம்: கடலுாா் மாவட்ட அளவில் நடந்த பூப்பந்து போட்டியில், சிதம்பரம் அரசு கலைக்கல்லுாரி மாணவிகள் வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளனா். முதலமைச்சா் கோப்பைக்கு, கல்லுாரி அணிகளுக்கு இடையே மாவட்ட அளவில் ... மேலும் பார்க்க