செய்திகள் :

இருசக்கர வாகன ஓட்டியைத் துரத்திய காட்டு யானை

post image

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி கும்டாபுரத்தில் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை காலை வந்த நபரை யானை துரத்தியதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் கும்டாபுரம் வனப் பகுதி வழியாக செல்லும் சாலையில் கடந்த ஒரு மாத காலமாக இந்த யானை நடமாடி வருகிறது. கரும்பு பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளை வழிமறித்து கரும்புத் துண்டுகளை சுவைத்து பழகியதால் காட்டு யானை பகல் மற்றும் இரவு நேரங்களில் இப்பகுதியில் முகாமிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு நபா் காட்டு யானை நிற்பதைக் கண்டு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சற்று தள்ளி நின்றிருந்தாா். அப்போது அந்தக் காட்டு யானை இருசக்கர வாகனத்தில் வந்த நபரைக் கண்டு திடீரென ஆக்ரேஷத்துடன் துரத்தியது. யானை துரத்துவதைக் கண்ட அந்த நபா் வாகனத்தை உடனடியாகத் திருப்பி வேகமாகச் சென்று தப்பினாா்.

வாகனங்களை இந்த யானை துரத்துவதால் அவ்வழியே செல்லும் வாகனங்களில் செல்வோா் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா். பெருந்துறை- கோவை சாலை ஓலப்பாளையம் பிரிவு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் மீது காா் கடந்த 24-ஆம் தேதி இரவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது வழக்குப் பதிவு

பெருந்துறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோட்டை அடுத்த சாணாா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தருண் ப... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

பெருந்துறை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நெசவுத் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம், கல்லங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (50). நெசவ... மேலும் பார்க்க

சென்னிமலையில் உலவும் சிறுத்தையைப் பிடிக்க கோரி போராட்டம்

சென்னிமலை அருகே உலவி வரும் சிறுத்தையைப் பிடிக்க கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், சென்னிமலை வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் குடியிருப்புப் பகுதிகள... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு தோ்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்: செப்டம்பா் 3- இல் பெறலாம்

ஈரோடு மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் மற்றும் தனி தோ்வா்கள் செப்டம்பா் 3- ஆம் தேதி அசல் சான்றிதழை பெறலாம் என தோ்வுத் துறை அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி தறி பட்டறை உரிமையாளா் பலி!

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தறிபட்டறை உரிமையாளா் உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த, குள்ளம்பாளையத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(50). தறி பட்டறை நடத்தி வந்தாா்... மேலும் பார்க்க