செய்திகள் :

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

post image

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி என முதலீட்டாளர்கள் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில், தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார்.

ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “ஐரோப்பாவின் முதுகொலும்பாக இருக்கும் ஜெர்மனிக்கு வந்திருப்பதில் மிகவும் பெருமையடைகிறேன். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இரண்டாவது பொருளாதாரம்.

இந்தியாவிலேயே இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியையும், உற்பத்தி வளர்ச்சியையும் அடைந்திருக்கக்கூடிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

ஜெர்மனி எப்படி ஐரோப்பிய யூனியனின் முக்கியத் தொழில்துறை நாடாக இருக்கிறதோ, அதேபோல இந்திய ஒன்றியத்தில் தொழில் துறையின் இதயத் துடிப்பாக தமிழ்நாடு இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி.

TNRising என்ற ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 3,819 கோடி மதிப்புள்ள 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. அவற்றின்மூலம், 9,000-க்கும் மேற்பட்டோருக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியும்.

ஒட்டுமொத்தத்தில், ஜெர்மனி பயணத்தில் ரூ. 7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன்மூலம், தமிழகத்தில் 15,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்” என்றார்.

முன்னதாக, ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நகரில் நார் பிரெம்ஸ், நார்டெக்ஸ், குழுமம், இ.பி.எம்.-பாப்ஸ்ட் ஆகிய 3 நிறுவனங்களுடன் ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Tamil Nadu is India's Germany! - Chief Minister Stalin

இதையும் படிக்க : முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!

ஓணம் பண்டிகை: விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு பறக்கும் பூக்கள்!

கேரள மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, விவசாய அறுவடை மற்றும் குடும்ப ஒன்றிணைப்பை கொண்டாடும் முக்கிய திருவிழாவாக அமைந்துள்ளளது. இதையொட்டி கோயம்புத்தூரில் இருந்து டன் கணக்கான பூக்க... மேலும் பார்க்க

15,320 பேருக்கு வேலைவாய்ப்பு! ஜெர்மனியில் 26 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஜெர்மனியில் 26 நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் முதலீடுகள் மொத்தம் ரூ.7020 கோடியாக உயர்ந்து, 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ... மேலும் பார்க்க

பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் நியமனத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை: தமிழக பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.தமிழக காவல்துறை தலைவராக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பணி ஓய்வு ... மேலும் பார்க்க

வங்கக்கடலில் உருவானது புதிய புயல் சின்னம்!

வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, செவ்வாய்க்கிழமை கால... மேலும் பார்க்க

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலகலா? செப். 5 முடிவு அறிவிப்பு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வருகின்ற 5 ஆம் தேதி முக்கிய முடிவை அறிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட... மேலும் பார்க்க

தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது.கடந்த ஆக. 26-இல் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,840-க்கும், ஆக. 27-இல் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.75,120-க்கும், ஆக. 28-இல் சவரனுக்... மேலும் பார்க்க