செய்திகள் :

பீகார் டு கோவை... வழிப்பறி கும்பலிடம் துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்!

post image

கோவை மாவட்டம், சூலூர் அருகே சுகந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேரி ஜூலியானா (47). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு 2 பேர் இருசக்கர வாகனத்தில் சிகரெட் வாங்குவது போல சென்று, ஜூலியானாவை சுத்தியால் தாக்கி, அவரிடமிருந்து 4 சவரன் தங்க நகைகளைப் பறித்து சென்றனர்.

கோவை அரசு மருத்துவமனை

இதில் படுகாயமடைந்த மேரி ஜூலியானாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில், கரூர் மாவட்டம் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் பீகாரை சேர்ந்த விஜயகுமார் ஷாணி, விக்ரம் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

குணசேகரன்
விக்ரம்குமார்

அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 18 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “விஜயகுமார் ரூ.20,000க்கு விக்ரம் குமாரிடம் கள்ளத்துப்பாக்கி வாங்கியுள்ளார். குறைந்த விலைக்கு துப்பாக்கி கொடுப்பதால் அவரிடம் வாங்கியுள்ளனர். விக்ரம் குமார் மேலும் யாருக்காவது துப்பாக்கி வாங்கி கொடுத்துள்ளாரா என்று விசாரணை நடத்தி வருகிறோம்.

கைது
கைது

குணசேகரன் கடந்த சில ஆண்டுகளாக ஆந்திராவில் வசித்து வருகிறார். இவர்கள் எப்படி இணைந்தனர், என்ன செய்து கொண்டிருந்தனர் என்று விசாரித்து வருகிறோம்.” என்றனர்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஈரோடு: அமெரிக்காவின் வரியால் சலுகை விலையில் ஆடைகள்; விளம்பரத்தை நம்பி போனவர்களுக்கு என்ன நடந்தது?

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்திருப்பது, உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் இந்த வரி விதிப்பை நீ... மேலும் பார்க்க

ஊட்டி: வீட்டு வாசலில் கஞ்சா சாகுபடி; மான் கறியில் உப்புக் கண்டம்; வனத்துறை சோதனையில் அதிர்ச்சி தகவல்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள கீழ் சேலதா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் வித்தியாசமான செடிகளை வளர்த்து வருவதாகவும், அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் இருப்பதாகவும் அக்... மேலும் பார்க்க

Ramya: `ஆபாச மெசேஜ், பாலியல் வன்கொடுமை மிரட்டல்' - நடிகை ரம்யா புகாரில் 12 பேர் கைது!

கன்னட நடிகர் தர்ஷன் தன் ரசிகரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற ஜாமீனை விமர... மேலும் பார்க்க

நெல்லை: தாயை அடித்துக் கொன்ற மகன்; திருமணம் மீறிய உறவால் நிகழ்ந்த கொடூரம்

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள எடுப்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெஜினா. இவரது கணவர் பூல்பாண்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் ரெஜினா, தனது இரண்டு மகன்க... மேலும் பார்க்க

கோவை: ரயில் கேட்பாரற்று கிடந்த 50 சவரன் நகைகள்; தம்பதிகளிடம் ஒப்படைத்த போலீஸ்; என்ன நடந்தது?

சென்னை ரயில் நிலையத்திலிருந்து, கோவை ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் ஒரு ரயில் வந்துள்ளது. பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு, ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் அந்த ரயில் பெட்டிகளுக்குள் வழக்கமான சோ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: "ஃபுல் பாட்டில ராவா குடிச்சு ஸ்டெடியா நிக்கணும்" - விபரீதத்தில் முடிந்த விளையாட்டு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுபின் (42). கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.சுபின் அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து... மேலும் பார்க்க