செய்திகள் :

பூம்புகார் அருகே கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

post image

பூம்புகார் அருகே வானகிரி கிராமத்தில் சுருக்குமடி வலை, இரட்டை மடி வலை, அதிவேக திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கையில் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி இன்று(செப். 2) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் சுருக்குமடி வலை, ரெட்டைமடி வலை, அதிவேக திறன் கொண்ட என்ஜின்களை கொண்டு மீன் பிடித்தல் மற்றும் காரைக்கால் பகுதி மீனவர்கள் இழுவை படகு மூலம் கடலில் மீன் பிடிப்பதால் கடலில் மீன்வளம் அழிந்து வருவதாகவும், சிறு தொழில் மீனவர்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படுவதாகவும் கூறி, கடந்த பல வருடங்களாக சீர்காழி தாலுகாவிற்கு உள்பட்ட வானகிரி, தொடுவாய், திருமுல்லைவாசல், கீழமூவக்கரை உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், மேற்கண்ட வலைகளை கொண்டு மீன்பிடிப்பதை தடை செய்ய வேண்டி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக, கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் பூம்புகார், சந்திரபாடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மட்டுமே சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாகவும் இதனால் 26 மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

எனவே, சுருக்குமடி வலைகளை தடை செய்ய வேண்டும் எனக் கூறினர். அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் 26 கிராம மீனவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பெண்கள் உள்ளிட்ட மீனவர்கள் போராட்டம்.

பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பெரிய விசைப்படகுகள், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர் என்ற தகவலை வெளியானது. இதனையடுத்து, சீர்காழி வட்டாச்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கிராம பொறுப்பாளர்கள் புகார் செய்தனர்.

ஆனாலும் வட்டாச்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வானகிரி உள்ளிட்ட பல்வேறு கிராம மீனவர்கள், இன்று(செப். 2) மீனவர்கள் மற்றும் பெண்கள் வானகிரி கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் உள்ளிட்ட மீனவர்கள் போராட்டம்.

அப்போது அவர்கள் கூறுகையில், ”சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை சூழலுக்கு விரோதமாக காணப்படும் இரட்டைமடி வலை, சுருக்குமடி வலை, அதிவேக திறன் கொண்ட என்ஜின்களைப் பயன்படுத்தி கடலில் மீன் பிடிப்பதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும். மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அனைத்து கிராமங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இதற்கு ஆதரவு தெரிவித்து சீர்காழி தாலுகாவிற்கு உள்பட்ட 26 மீனவ கிராமங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்” என்றனர்.

இதனை அடுத்து பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் நேரில் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதையும் படிக்க: மூளையைத் தின்னும் அமீபா: மனித மூளைக்குள் எப்படி நுழைகிறது? தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

Fishermen protested by going into the sea with a black flag in Wanagiri village near Poompuhar.

விவசாயிகளுக்கு திமுக அரசால் துரோகம்: எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சிப் பயணத்தை மதுரை மேலூரில் இன்று எட... மேலும் பார்க்க

பெண் அதிகாரியுடன் வாக்குவாதம்? உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி வாகனங்களை ஒழுங்குபடுத்தக் கூறிய இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சென்னை கோயம்பேடு உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். குடியரசுத்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு அனுமதி!

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. பணிநிரந்தரம் கோரி கடந்த மாதம் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியா... மேலும் பார்க்க

திருச்சி கோட்டத்தில் பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்!

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொ... மேலும் பார்க்க

சென்னையில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னையில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:இன்று (02-09-2025) காலை 5.30 மண... மேலும் பார்க்க

ரூ. 98 கோடி ஒப்பந்த முறைகேடு: வழக்கில் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்ப்பு!

சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ. 98.25 கோடி முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல... மேலும் பார்க்க