செய்திகள் :

அழகான குழந்தைகளை பார்க்கும் போது கிள்ளிவைக்க தோன்றுகிறதா?- இதற்கு பின்னால் இருக்கும் காரணம் இதுதான்!

post image

அழகான குழந்தைகளை பார்க்கும்போது அல்லது சிறிய நாய்க்குட்டி பூனைக்குட்டி என கியூட்டாக ஏதேனும் ஒரு விஷயத்தை பார்க்கும்போது அவற்றை கிள்ளவோ, இறுக்கி அணைக்கவோ, விளையாட்டாக கடிக்கவோ தோன்றும். இந்த உணர்வினை கியூட்னஸ் அஃரஸ்யூ (cuteness aggressive) என்று அழைக்கின்றனர்.

எதற்காக இந்த உணர்வு நமது மூளைகளில் தோன்றுகிறது என்பது குறித்தும், இது இயல்பான ஒன்றா என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

அழகான ஒன்றை பார்க்கும் போது விளையாட்டுத்தனமாக அதனை சீண்டிப் பார்ப்போம். அதாவது ஒரு குழந்தையின் கன்னத்தை பிடித்து கிள்ளுதல் அல்லது அவர்களின் கைகளைப் பிடித்து வைத்தல் என விளையாட்டாக செய்வோம். இது உண்மையிலேயே வன்முறையான செயலா என்று கேட்டால் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

மகிழ்ச்சியில் அழுவது போல மிகுந்த அழகு மூளையில் ஒரு வகையான உணர்ச்சி மிகுதியை உருவாக்கும் போது இந்த வகையான உணர்வு இயல்பாகவே வெளிப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மூளையில் இது எப்படி செயல்படுகிறது?

Frontiers in Behavioral Neuroscience இதழில் வெளியான ஆய்வின்படி, அழகிய குழந்தைகள் அல்லது க்யூட்டாக இருக்கும் விலங்குகளின் புகைப்படங்களை பார்த்தவர்களின் மூளையின் மையங்களில் இதுபோன்ற அதிகமான செயல்பாடு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

அதாவது இந்த க்யூட்னஸ் அஹ்ரஸிவ் என்ற உணர்வு அவர்களுக்கு மிகுதியாக ஏற்பட்டுள்ளது. அப்படியானால் அவர்கள் வன்முறையை கையாளுகின்றார்களா என்று கேட்டால் இல்லை, இது மூளையின் உணர்ச்சி மிகுதியை நிர்வகிக்கும் ஒரு வழிமுறை தானே தவிர எந்த ஒரு எதிர்மறையான எண்ணங்களுக்கும் இது வராது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

எல்லாருக்கும் இந்த வகையான உணர்வு ஒரே மாதிரியாக இருக்காது என்றும் உணர்ச்சி உணர்திறன் மற்றும் ஆளுமை பண்புகளைப் பொறுத்து இது மாறுபடும் என்று கூறுகின்றனர்.

மிகுந்த மகிழ்ச்சியை ஒரு சிறிய ஆக்ரோஷத்துடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் மூளை ஒரு விதமான நிலைத்தன்மையில் செயல்படுவதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இசையால் சாக்லேட்டின் சுவையை அதிகரிக்க முடியுமா? - புதிய ஆய்வில் கண்டறியப்பட்ட சுவாரஸ்யத் தகவல்!

இசையால் மனதை அமைதிப்படுத்தவும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் முடியும் என்று பலரும் அறிந்திருப்போம். ஆனால் ஒரு இசை உணவின் சுவையைக் கூட மேம்படுத்தும் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இசை நிபுணர்கள் இசைய... மேலும் பார்க்க

Snake: இறந்த பிறகும் விஷத்தைக் கக்கும் இந்தியப் பாம்புகள்; புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

இந்தியாவில் காணப்படும் சில கொடிய பாம்பு இனங்கள், குறிப்பாக நாகப்பாம்பு (Cobra) மற்றும் கிரைட் (Krait) போன்ற பாம்புகள் இறந்துபோன பின்பும் கூட பல மணி நேரத்திற்கு விஷம் வெளிப்படுத்தக் கூடியவை எனப் புதிய ... மேலும் பார்க்க

‘டைனோசர்’ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? ஓர் ஆச்சரியப் பின்னணி

‘டைனோசர்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் பெரிய, செதில்கள் நிறைந்த மிருகங்கள், முன்பு ஒரு காலத்தில் உலவிய காட்சிகள் நம் மனதில் தோன்றும். இந்த பெயர் எங்கிருந்து வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்க... மேலும் பார்க்க

China: குழந்தையைப் பெற்றெடுக்கப் போகும் `ரோபோக்கள்' - மனிதனுக்கு கிடைக்கும் பயன் என்ன?

சீன விஞ்ஞானிகள் மனித குழந்தையைப் பெற்றெடுக்கும் ரோபோவை உருவாக்கி வருகின்றனர்.சீனாவில் உள்ள விஞ்ஞானிகள் உலகின் முதல் "கர்ப்ப ரோபோவை” உருவாக்கி வருவதாக தி டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தொழில்... மேலும் பார்க்க

ஒட்டக கண்ணீர் பல வகை பாம்பு விஷங்களை எதிர்க்கும் திறன் கொண்டதா? - ஆராய்ச்சி சொல்வது இதுதான்!

ஒட்டக கண்ணீரில் உள்ள ஆன்டிபாடிகள் பல பாம்பு இனங்களின் விஷங்களை எதிர்க்கும் திறன் கொண்டவை என தகவல்கள் வெளியாகின. துபாயில் உள்ள ஒரு கால்நடை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் இவ்வாறு வந்ததா... மேலும் பார்க்க

நிலவில் அணுமின் நிலையம்: ``சந்திரனை உரிமை கோருவோம்'' - அமெரிக்காவின் திட்டம் என்ன?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அரசாங்கம் நிலவில் அணு மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை விரைவாக நிகழ்த்த உத்தரவிட்டுள்ளது. நாசாவின் தற்காலிக நிர்வாகி சீன் டஃபி கூறியதன்படி, 2030-க்குள் இந்த திட்டத்தைப் ச... மேலும் பார்க்க