செய்திகள் :

France: "தினமும் 100 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை"- மருத்துவமனைகளை போருக்கு தயார் செய்வது ஏன்?

post image

ஐரோப்பாவில் இன்னும் ஒரு வருடத்துக்குள் மிகப்பெரிய அளவில் போர் வெடிக்க வாய்ப்புகள் இருப்பதனால், இதுவரை இல்லாத வகையில் மருத்துவமனைகளை தயாராக இருக்கும்படி கூறியுள்ளது பிரான்ஸ் அரசு.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் முடிவை எட்ட முடியாத சூழலில், ரஷ்யா - நேட்டோ நாடுகள் இடையில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

NATO Summit

France சுகாதாரத்துறை அறிவிப்பு

இந்த சூழலில் 2026க்குள் பிரான்ஸில் உள்ள மருத்துவமனைகள் தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் அளவு தயாராக வேண்டுமென அந்த நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் இதில் போர் கால சூழலையும் கணக்கில்கொள்ள வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

Le Canard enchaîné என்ற பிரான்ஸ் செய்தித்தாள் கூறுவதன்படி, 10 முதல் 180 நாள்களில் ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் தயாராக வேண்டுமென்றும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் அருகில் மருத்துவ முகாம்கள் அமைக்க பிரான்ஸ் திட்டமிடுவதாகவும் சுகாதாரத்துறையின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Catherine Vautrin

சுகாதாரத்துறை அமைச்சர் சொல்வதென்ன?

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கேத்தரின் வௌட்ரின், "ஒரு நாடு நெருக்கடிகளையும் அவற்றின் விளைவுகளையும் எதிர்பார்ப்பது சாதாரணமானதுதான்... கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டபோது நாம் எந்த அளவு முன் தயாரிப்பு இல்லாமல் இருந்தோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

2022 முதல் தொடரும் தயாரிப்புகள்

சில வாரங்களுக்கு முன்பு பிரான்ஸ் ஆயுத மோதல் ஏற்படும்போதும், இயற்கை பேரழிவுகள் மற்றும் பிற துர்நிகழ்வுகளின் போதும் மக்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்து 20 பக்கங்கள் கொண்ட survival guides (உயிர் பிழைப்பதற்கான வழிகாட்டல்கள்) வெளியிட்டது. அதில் தண்ணீர், பதிவு செய்யப்பட்ட உணவு, பேட்டரிகள் மற்றும் முதலுதவி பெட்டிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. அணு ஆயுதத் தாக்குதல்களைக் கையாள்வது மற்றும் உள்ளூர் பாதுகாப்புப் படைகளில் சேருவது போன்றவற்றுடன், 63 நடவடிக்கைகள் அதில் கூறப்பட்டிருந்தன.

2022ம் ஆண்டு முதலே பிரான்ஸ் இத்தகைய தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் மொத்த வருமானத்தில் ராணுவத்துக்கு செலவழிக்கப்படும் 2% சமீப ஆண்டுகளில் 3-3.5% ஆக உயர்ந்திருக்கிறது.

'GST சீர்திருத்தங்கள் சிறு வணிகங்கள் செழிக்க உதவும்' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த தனியார் வங்கியின் நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தனியார் துறை வங்கிகள் இந்தியாவின் தேச கட்டமைப்புக்கு முக்கிய பங்கு வகிக்கின... மேலும் பார்க்க

ADMK : மதிக்காத EPS விலகும் செங்கோட்டையன்? | TVK : Vijay -க்கு Srilanka அரசு பதிலடி |Imperfect Show

* அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்?* வெள்ள பாதிப்பு- பஞ்சாப் முதல்வருடன் மோடி பேச்சு!* ஜம்மு காஷ்மீரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அமித் ஷா?* மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை...... மேலும் பார்க்க

"வெள்ள நீரை வீட்டில் சேமியுங்கள்; அணை கட்ட 10 வருடங்கள் ஆகும்" - பாகிஸ்தான் அமைச்சர் யோசனை

பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத பருவமழையால், 150 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்நாட்டின் முக்கிய கோதுமை உற்பத்தி மாகாணமான பஞ்சாப் மாகாணம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது.அந்நாட்டு ஊடக தகவலின்படி, கனமழை ... மேலும் பார்க்க

'லேப்டாப் எங்க... தாலிக்கு தங்கம் எங்க..?' - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் மதுரை மேலூரில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் இந்தியா கூட்டணியையு... மேலும் பார்க்க

மனோஜ் ஜராங்கே கோரிக்கையை ஏற்ற அரசு; முடிவுக்கு வரும் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்!

மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே 30 ஆயிரம் மராத்தா இன மக்களோடு சேர்ந்து மும்பையில் கடந்த 29ம் தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மும்பையின் தென்பகுதியில் உள்... மேலும் பார்க்க