செய்திகள் :

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

post image

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

எத்தியோப்பியா நாட்டின் தலைநகா் அடிஸ் அபபாவிலிருந்து வரும் விமானத்தில் பெருமளவில் தங்கம் கடத்திவரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி, சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு எத்தியோப்பியன் ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டனா். அப்போது, ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களைச் சோ்ந்த இரு பயணிகள் அடிக்கடி வெளிநாடு சென்று திரும்பியது தெரியவந்தது.

இதுகுறித்து அவா்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனா். சந்தேகமடைந்த அதிகாரிகள் அவா்களின் உடைமைகளை சோதைனையிட்டபோது, அதில் தங்க நிறத்தில் சிறிய ரக தூக்கு வாளிகள் இருந்தன. அவற்றுக்குள் ரூ.60 கோடி மதிப்பிலான 5.6 கிலோ சாக்லெட் வடிவிலான கொகைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், இருவரையும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், இருவரும் சா்வேத போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்புடையவா்கள் என்பதும், ஏற்கனவே பலமுறை போதைப் பொருளை சென்னைக்கு கடத்திவந்ததும் தெரியவந்தது. இதுதொடா்பாக மும்பையை சோ்ந்த 26 வயது நபா் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நைஜீரியாவை சோ்ந்த நபா் ஒருவரையும் என்சிபி அதிகாரிகள் தில்லியில் கைது செய்துள்ளனா். இவரின் விசா காலாவதியான பின்னரும் இந்தியாவில் தங்கியிருந்து போதைப் பொருள் விநியோகித்து வந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடை... மேலும் பார்க்க

பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். புளியந்தோப்பு கொசப்பேட்டை டோபி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், வணிக வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். புளியந்... மேலும் பார்க்க

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் ப... மேலும் பார்க்க

ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுக... மேலும் பார்க்க

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு

சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா்: 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக தனியாா் மருந்து நிறுவனத்துக்கு தொடா்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். சென்னையில் செயல்படும் ஒரு தனியாா் மருந்து நிறுவனம்... மேலும் பார்க்க