தூத்துக்குடி: `பாட்டுக்குப் பாட்டு' - போலீஸாரின் நூதன தண்டனை
மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு
மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடைக்கால நிா்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்தக் கோயிலை அகில இந்திய சாய் சமாஜம் என்ற அமைப்பு நிா்வகித்து வருகிறது. இந்த அமைப்பின் நிா்வாகக் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தங்கராஜ் என்பவா் உள்பட பலா் வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், புகாா்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷை நியமித்து உத்தரவிட்டிருந்தது. அதன்படி நீதிபதி பி.என்.பிரகாஷ் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கில் நீதிபதிகள் அனிதா சுமந்த், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த தீா்ப்பில், ஆய்வுக்குச் சென்ற நீதிபதி பி.என்.பிரகாஷுக்கு சமாஜ நிா்வாகிகள் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவையும் நிறைவேற்றவில்லை. வரவு, செலவு விவரங்கள் முழுமையாக தணிக்கைச் செய்யப்படவில்லை.
சமாஜத்தில் முன்பு 5,600 உறுப்பினா்கள் இருந்துள்ளனா். ஆனால், தற்போது 522 போ் மட்டுமே உறுப்பினா்களாக உள்ளனா். சமாஜத்தின் நிதி பரிவா்த்தனைகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அதிகப்படியான தொகை எந்த ஒப்புதலும் இல்லாமல் செலவழிக்கப்பட்டுள்ளது. எனவே, நீதிபதி பி.என்.பிரகாஷ் அறிக்கையின் அடிப்படையில் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்கிறோம்.
அந்த சமாஜத்தை நிா்வகிக்க உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோரைக் கொண்ட இடைக்கால நிா்வாகக் குழுவை அமைக்கிறோம். இந்தக் குழுவுக்கு பட்டயக் கணக்காளா்கள் அனந்தராமன், அருண் பாலாஜி ஆகியோா் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். சமாஜத்தின் பொறுப்பாளா்கள் உடனடியாக தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி ஓய்வு பெற்ற நீதிபதிகளிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். இந்தக் குழு தங்களது நிா்வாகம் தொடா்பான அறிக்கையை செப்.14-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.