செய்திகள் :

இருமுனை கத்தியாக உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை! - முன்னாள் பயிற்சியாளர் கருத்து

post image

உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை தொடர் இருமுனை கூர் கொண்ட கத்தியாக இருக்கும் என இந்திய மகளிரணியின் முன்னாள் பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமன் தெரிவித்துள்ளார்.

7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி அசாமின் குவாஹாட்டியில் துவங்குகிறது.

இந்த உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில், அனைத்து அணி வீராங்கனைகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியா சார்பில் இதுவரை 1978, 1997 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது நான்காவது முறையாக இந்தியாவில் உலகக் கோப்பை நடத்தப்படவுள்ளது.

இதில், இந்திய அணி 2005, 2017 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை வந்து இரண்டாம் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து இந்திய மகளிரணியின் முன்னாள் பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமன் கூறுகையில், “உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவது என்பது பழக்கப்பட்ட சூழல், எளிமையாக இருக்கும் எனக் கருதலாம். ஆனால், சிறப்பாக விளையாடும் அணிக்கு எதிராக அதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

சொந்தமண்ணில் விளையாடுவதால் மெத்தனப் போக்குடன் இருக்கக்கூடாது. உள்ளூர்ப் போட்டிகள் இருமுனை கூர்கொண்ட கத்தியைப் போன்று இருக்கலாம். மற்ற அணிகளும் இப்போது சுழற்பந்து வீச்சில் சிறப்பாக விளையாடுகின்றன. இந்திய அணி பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

இந்திய அணி இதுவரை உலகக் கோப்பையை வென்றதில்லை. ஆனால், 2 முறை இரண்டாம் இடம்பிடித்திருக்கிறது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடியது.

இந்திய அணியில் காலங்காலமாக சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணியிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் இது இந்திய அணிக்குத்தான் சவாலாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Home World Cup can be double-edged sword, can't just relax: Former India women's coach

இதையும் படிக்க : நியூசிலாந்து டி20 தொடர்: ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக மிட்செல் மார்ஷ்!

அஸ்வினுக்கு அழைப்பு விடுத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

சிஎஸ்கேவிலிருந்து விலகிய ஆர்.அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் தொடரில் விளையாட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் இருந்து அஸ்வினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்க... மேலும் பார்க்க

கேப்டன் கூல் தோனி மாதிரி ஆக விரும்பும் பாகிஸ்தான் மகளிரணி கேப்டன்!

பாகிஸ்தான் மகளிரணி கேப்டன் பாதிமா சனா உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி போல கூலாக இருக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்த மாதத்... மேலும் பார்க்க

39 வயதில் ஐசிசி ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடம்! சிக்கந்தர் ராஸா அசத்தல்.!

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்து 39 வயதான ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராஸா அசத்தியுள்ளார்.ஐசிசியின் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படும். அதன்பட... மேலும் பார்க்க

நியூசிலாந்து டி20 தொடர்: ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக மிட்செல் மார்ஷ்!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் வர... மேலும் பார்க்க

முதல் ஒருநாள்: இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 ... மேலும் பார்க்க