செய்திகள் :

அன்புமணிக்கு மீண்டும் கெடு விதித்த ராமதாஸ்!

post image

கட்சி விரோத நடவடிக்கை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்க வரும் செப். 10 வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. ராமதாஸின் எதிர்ப்பை மீறி அன்புமணி, கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ராமதாஸ் தலைமையில் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக ஒழுங்கீனமாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவா் இதுகுறித்து ஆக. 31-க்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த நோட்டீஸுக்கு அன்புமணி தரப்பில் எந்த பதிலும் அனுப்பப்படவில்லை.

குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி விளக்கமளிக்க கடந்த 31 ஆம் தேதியுடன் கெடு முடிந்த நிலையில், மேலும் 10 நாள்கள் அவகாசம் அளிப்பதாக ராமதாஸ் இன்று கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ராமதாஸ்,

"அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது? என்பது பற்றியும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் வருகிற செப். 10 ஆம் தேதிக்குள் அவர் பதிலளிக்க வேண்டும். இல்லையெனில் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கையின் படியும் கட்சி நிர்வாகக் குழுவின் முடிவின்படியும் அன்புமணி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியின் பொதுச் செயலாளர் இதுகுறித்த அறிக்கையை அன்புமணிக்கு அனுப்பி வைப்பார்.

முதல்முறையாக அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு பதில் வரவில்லை. நேரிலோ அல்லது எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கக் கேட்டிருந்தோம். நிர்வாகக் குழு கூடி, மேலும் 10 நாள்கள் அவருக்கு கால அவகாசம் வழங்கலாம் என்று முடிவெடுத்துள்ளது. பதிலளிக்கவில்லை எனில் என்ன நடவடிக்கை எடுப்போம் என்பதை இப்போது சொல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.

PMK Ramadoss again sets a deadline for Anbumani to explain the allegations

வலுவடைந்த புயல் சின்னம்! சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நேற்று(செப். 3) உருவான புயல் சின்னம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ச... மேலும் பார்க்க

செப். 5-ல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!

மிலாது நபியையொட்டி வருகிற செப். 5 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது. எனினும் அவசரப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல செயல்... மேலும் பார்க்க

அவல ஆட்சி இருந்து என்ன பயன்: இபிஎஸ்

சென்னை சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாருமான எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

லண்டனிலும் தமிழக வளர்ச்சிக்கான முதலீட்டாளர் சந்திப்பு: முதல்வர் ஸ்டாலின்

வெளிநாடு பயணம் குறித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன... மேலும் பார்க்க

தில்லியில் தமிழக பாஜக தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை!

தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தில்லியில் தமிழக பாஜக தலைவர்களுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் க... மேலும் பார்க்க

அதிமுக சி. விஜயபாஸ்கர் வீடு, தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டிற்கும் தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அத... மேலும் பார்க்க