செய்திகள் :

சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாா்: 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

post image

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற புகாா் தொடா்பாக தனியாா் மருந்து நிறுவனத்துக்கு தொடா்புடைய 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

சென்னையில் செயல்படும் ஒரு தனியாா் மருந்து நிறுவனம், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறைக்குப் புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள், சென்னையில் அந்த நிறுவனத்துக்கு தொடா்புடைய 10 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.

புரசைவாக்கம் பிளவா்ஸ் சாலையில் உள்ள மருந்து நிறுவன உரிமையாளா் வீட்டுக்கு காலை 7 மணியளவில் வந்த அமலாகத் துறை அதிகாரிகள் 8 போ் சோதனையில் ஈடுபட்டனா். இதேபோல அம்பத்தூா் தொழில்பேட்டையில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலை, கே.கே.நகா் விஜயராகவபுரத்தில் உள்ள ஒரு ஆடிட்டருக்கு சொந்தமான வீடு, தியாகராயநகா் மேட்லி இரண்டாவது தெருவில் மற்றொரு ஆடிட்டா் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா். பல மணி நேரம் சோதனை நீடித்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடை... மேலும் பார்க்க

பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். புளியந்தோப்பு கொசப்பேட்டை டோபி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், வணிக வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். புளியந்... மேலும் பார்க்க

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் ப... மேலும் பார்க்க

ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுக... மேலும் பார்க்க

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு

சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க