செய்திகள் :

ட்ரம்ப் விதித்த வரிகள்: அமெரிக்காவிற்கு கிடைத்த லாபம் எவ்வளவு? - கருவூல செயலாளரின் புள்ளிவிவரம்

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்த வரிகள் அமலுக்கு வந்துவிட்டன.

இதனால், அமெரிக்காவிற்கு எவ்வளவு லாபம் கிடைத்தது என்பதை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ஸ்.

"இந்த ஆண்டு, அமெரிக்காவிற்கு வரும் வரி மூலமான வருமானம் 300 பில்லியன் டாலர்களைத் தொடலாம். அதற்கு மேலும் கூட செல்லலாம்.

அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்
அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்

ஒவ்வொரு 300 பில்லியன் டாலரும் அமெரிக்காவின் மொத்த உற்பத்தி திறனை 1 சதவீதம் அதிகரிக்கும்.

இந்த வரிகளால் மட்டும் 5 சதவீத வளர்ச்சியை அடையலாம்" என்று தெரிவித்துள்ளார்.

புள்ளிவிவரங்கள்

மேலும், அவர் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரையிலான வரி வருமானம் குறித்த புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில் ஜனவரி மாதம், அமெரிக்காவின் வரி வருமானம் கிட்டத்தட்ட 9 பில்லியன் டாலராக இருந்துள்ளது. அடுத்த எட்டே மாதங்களில், அந்த வருமானம் 31 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ஸ்காட் பெசென்ட் வெளியிட்டு புள்ளிவிவரங்கள்
ஸ்காட் பெசென்ட் வெளியிட்டு புள்ளிவிவரங்கள்

உலக நாடுகளின் மீது ட்ரம்ப் விதித்த வரிகள் சட்டத்திற்கு புறம்பானவை என்று அமெரிக்க பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார் ட்ரம்ப்.

ஒருவேளை, அதில் ட்ரம்பிற்கு எதிராக தீர்ப்பு வந்தால், இந்த வருமானங்கள் என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

US: வரி முதல் வழக்கு வரை ட்ரம்ப் அதிரடியால் அமெரிக்க பொருளாதாரம் தள்ளாடுகிறதா?

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி, அமெரிக்காவில் 'தொழிலாளர் தினம்' கொண்டாடப்பட்டது. இதனால், அன்று அமெரிக்காவில் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.ஆக, நேற்று தான் அமெரிக்காவில் செப்டம்பர் மாதத்தின் ... மேலும் பார்க்க

``ரூ.50 கோடியில் கட்டி, முதல்வர் ஸ்டாலின் திறந்த பஸ் ஸ்டாண்ட் பயனில்லை'' -குமுறும் சோழவந்தான் மக்கள்

முதலமைச்சர் தொடங்கி வைத்தும், மதுரை மாவட்டம் சோழவந்தானில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் மக்களின் பயன்பாட்டுக்கு முழுமையாக வராமல் முடங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின... மேலும் பார்க்க

TVK: புதுச்சேரியில் புதிய கூட்டணியை அமைக்கிறாரா விஜய்? - தவெக விளக்கம்

புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி, புதுச்சேரியில் தவெக ஒரு புதிய கூட்டணியை அமைக... மேலும் பார்க்க

``அமெரிக்காவிற்கு எதிராக சீனா சதி; புதின், கிம் ஜாங் வாழ்த்துகள்'' -கோபத்தில் ட்ரம்ப்: என்ன காரணம்?

இரண்டாம் உலகப் போர் முடிவின் 80-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நேற்று சீனாவில் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு நடந்தது.இந்த அணிவகுப்பை 26 உலக நாடுகளின் தலைவர்கள் கண்டுகளித்தனர். இதில் மிக முக்கியமாக கவனிக... மேலும் பார்க்க

விவசாயி என்று நிலத்தை விலைக்கு வாங்கி சர்ச்சையில் சிக்கிய சுஹானா கான் - வருமான வரித்துறை விசாரணை

சுஹானா கான்பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக் அருகே கடற்கரையோரம் பண்ணை வீடு உள்ளது. அந்த பண்ணை வீடு இருக்கும் பகுதியில், ஷாருக் கான் மகள் சுஹானா கானும் இரண்டு நிலங்களை வாங்கி ... மேலும் பார்க்க

Mumbai: ``மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வெற்றி'' - உண்ணாவிரதத்தை முடித்த மனோஜ் ஜராங்கே

மராத்தா இட ஒதுக்கீடுமும்பையில் கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல், மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே, மராத்தா சமுதாயத்திற்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், அவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர... மேலும் பார்க்க