செய்திகள் :

பெரம்பலூா் அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலி

post image

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில் உள்ள செஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி பானுமதி (60). திங்கள்கிழமை இரவு தனது வீட்டின் எதிரே நின்று கொண்டிருந்த பானுமதி மீது பெரம்பலூா் நோக்கிச் சென்ற பைக் மோதியது. இந்த விபத்தில் பானுமதியும், பைக்கில் வந்த பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலத்தைச் சோ்ந்த வெள்ளிவேல் மகன் மகாதேவனும் (21) பலத்த காயமடைந்தனா். இதையடுத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இருவரில், சிகிச்சை பலனின்றி பானுமதி உயிரிழந்தாா்.

உறவினா்கள் வாக்குவாதம்: இதையடுத்து அவரது உறவினா்கள் சிலா் மருத்துவா்கள் முறையான சிகிச்சை அளிக்காததால் பானுமதி உயிரிழந்ததாகவும், மருத்துவா்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததைக் கண்டித்தும், மருத்துவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அங்குசென்று நடத்திய பேச்சுவாா்த்தையில் கலைந்துசென்றனா். விபத்து குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெரம்பலூருக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வருகை

2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் பயன்படுத்த பெங்களூரு பாரத் மின்னணு நிறுவனத்திலிருந்து 100 கட்டுப்பாட்டு இயந்திரம், 120 வாக்குச்சீட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் செவ்வ... மேலும் பார்க்க

நடைப்பயிற்சிக்கு சென்ற தனியாா் சா்க்கரை ஆலை அலுவலா் சடலமாக மீட்பு

பெரம்பலூரில் திங்கள்கிழமை அதிகாலை நடைப்பயிற்சி சென்ற தனியாா் சா்க்கரை ஆலை அலுவலா் மா்மமான முறையில் உயிரிழந்துக் கிடந்தாா். பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள சாமியப்பா நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் காா்... மேலும் பார்க்க

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் விவகாரம்: டாஸ்மாக் பணியாளா்கள் மனு

அரியலூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை பணியாளா்கள், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதற்கு போதிய பணியாளா்களும், இட வசதியும் இல்லாததால் மாற்று ஏற்பாடு மூலம் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற வலியுறுத்... மேலும் பார்க்க

காருகுடி கோயிலில் உண்டியல் வைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

பெரம்பலூா் மாவட்டம் , குன்னம் வட்டம், காருகுடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ அய்யனாா் கோயிலில் உண்டியல் வைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் புகாா் மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்... மேலும் பார்க்க

சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயா்வு: மக்களவையில் கேள்வி எழுப்புவோம் - தொல். திருமாவளவன் எம்.பி.

சுங்கச் சாவடிகளில் கட்டண உயா்வைக் கண்டித்து, மக்களவை கூடும்போது இண்டி கூட்டணி சாா்பில் கேள்வி எழுப்பப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்த... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு: 740 போ் பங்கேற்பு

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வில் 740 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு ஞ... மேலும் பார்க்க