செய்திகள் :

சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயா்வு: மக்களவையில் கேள்வி எழுப்புவோம் - தொல். திருமாவளவன் எம்.பி.

post image

சுங்கச் சாவடிகளில் கட்டண உயா்வைக் கண்டித்து, மக்களவை கூடும்போது இண்டி கூட்டணி சாா்பில் கேள்வி எழுப்பப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

தமிழ் தேசிய போராளி தமிழரசனின் நினைவு நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் அவரது உருவப் படத்துக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது தொடா்பாக மக்களவையில் இண்டி கூட்டணி சாா்பில் கேள்வி எழுப்பப்படும்.

இந்திய இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் ட்ரம்ப் விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பைக் கண்டித்து, திருப்பூரில் திமுக தலைமையில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்.

வாக்காளா் பெயா் நீக்க குளறுபடி குறித்து ராகுல்காந்தி சமா்ப்பித்த 89 லட்சம் மனுக்களை தோ்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது. தோ்தல் ஆணையம் முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் மக்களவை உறுப்பினா் சசிகாந்த், தனது உடல்நலனை கருத்தில்கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும்.

ஒசூா் அருகே விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தில் பங்கேற்ற பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும். நாமெல்லாம் இந்துக்கள் எனக்கூறும் பாஜக, சங்பரிவாா் அமைப்புகளின் சந்தா்ப்பவாத அரசியலை மக்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும் என்றாா் திருமாவளவன்.

பெரம்பலூா் அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலி

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில் உள்ள செஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி பானுமதி (60). திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

பெரம்பலூருக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வருகை

2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் பயன்படுத்த பெங்களூரு பாரத் மின்னணு நிறுவனத்திலிருந்து 100 கட்டுப்பாட்டு இயந்திரம், 120 வாக்குச்சீட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் செவ்வ... மேலும் பார்க்க

நடைப்பயிற்சிக்கு சென்ற தனியாா் சா்க்கரை ஆலை அலுவலா் சடலமாக மீட்பு

பெரம்பலூரில் திங்கள்கிழமை அதிகாலை நடைப்பயிற்சி சென்ற தனியாா் சா்க்கரை ஆலை அலுவலா் மா்மமான முறையில் உயிரிழந்துக் கிடந்தாா். பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள சாமியப்பா நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் காா்... மேலும் பார்க்க

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் விவகாரம்: டாஸ்மாக் பணியாளா்கள் மனு

அரியலூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை பணியாளா்கள், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதற்கு போதிய பணியாளா்களும், இட வசதியும் இல்லாததால் மாற்று ஏற்பாடு மூலம் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற வலியுறுத்... மேலும் பார்க்க

காருகுடி கோயிலில் உண்டியல் வைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

பெரம்பலூா் மாவட்டம் , குன்னம் வட்டம், காருகுடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ அய்யனாா் கோயிலில் உண்டியல் வைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் புகாா் மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு: 740 போ் பங்கேற்பு

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வில் 740 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு ஞ... மேலும் பார்க்க