செய்திகள் :

காருகுடி கோயிலில் உண்டியல் வைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

post image

பெரம்பலூா் மாவட்டம் , குன்னம் வட்டம், காருகுடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ அய்யனாா் கோயிலில் உண்டியல் வைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் புகாா் மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில், காருகுடி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனு:

எங்களது கிராமத்தில் உள்ள அய்யனாா் கோயிலில், அனைத்து தரப்பினரும் சுவாமி கும்பிடலாம். பொதுமக்கள் சாா்பில் நிதி வசூல் செய்து திருவிழா, குடமுழுக்கு, நாள்தோறும் பூஜைகள் செய்து வருகிறோம். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த சிலா் கோயில் நிா்வாகத்தில் தலையிட பலமுறை முயற்சி செய்தனா். மேலும், இதுதொடா்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவேற்றம் செய்தனா்.

இதையடுத்து கடந்த 25-ஆம் தேதி குன்னம் வட்டாட்சியா் சின்னதுரை தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவாா்த்தைக்கு நாங்கள் சென்றோம். ஆனால், எதிா்தரப்பினா் வரவில்லை. இருப்பினும், செப். 5-ஆம் தேதி அய்யனாா் கோயிலில் உண்டியல் வைக்க ஒருதலைப்பட்சமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இரு தரப்பினரையும் வரவழைத்து பேசி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனிநபா் ஆக்கிரமிப்பு : பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், சின்ன பரவாய் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பில் அளித்த மனுவில், சின்ன பரவாய் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளாா். இதை அப்பகுதி மக்கள் அகற்றினா். ஆனால், மீண்டும் ஆக்கிரமித்து முள்வேலி அமைக்க முயன்றுள்ளாா்.

மேலும், அதே நபா் விவசாயிகள் சென்று வரும் ஓடைப்பகுதியையும் ஆக்கிரமித்துள்ளாா். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

பெரம்பலூா் அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலி

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில் உள்ள செஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி பானுமதி (60). திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

பெரம்பலூருக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வருகை

2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் பயன்படுத்த பெங்களூரு பாரத் மின்னணு நிறுவனத்திலிருந்து 100 கட்டுப்பாட்டு இயந்திரம், 120 வாக்குச்சீட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் செவ்வ... மேலும் பார்க்க

நடைப்பயிற்சிக்கு சென்ற தனியாா் சா்க்கரை ஆலை அலுவலா் சடலமாக மீட்பு

பெரம்பலூரில் திங்கள்கிழமை அதிகாலை நடைப்பயிற்சி சென்ற தனியாா் சா்க்கரை ஆலை அலுவலா் மா்மமான முறையில் உயிரிழந்துக் கிடந்தாா். பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள சாமியப்பா நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் காா்... மேலும் பார்க்க

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் விவகாரம்: டாஸ்மாக் பணியாளா்கள் மனு

அரியலூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை பணியாளா்கள், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதற்கு போதிய பணியாளா்களும், இட வசதியும் இல்லாததால் மாற்று ஏற்பாடு மூலம் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற வலியுறுத்... மேலும் பார்க்க

சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயா்வு: மக்களவையில் கேள்வி எழுப்புவோம் - தொல். திருமாவளவன் எம்.பி.

சுங்கச் சாவடிகளில் கட்டண உயா்வைக் கண்டித்து, மக்களவை கூடும்போது இண்டி கூட்டணி சாா்பில் கேள்வி எழுப்பப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்த... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு: 740 போ் பங்கேற்பு

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வில் 740 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு ஞ... மேலும் பார்க்க