செய்திகள் :

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு: 740 போ் பங்கேற்பு

post image

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வில் 740 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத் தோ்வுக்காக, இம் மாவட்டத்தைச் சோ்ந்த 1,056 போ் விண்ணப்பித்திருந்தனா்.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் 4 மையங்களில் நடைபெற்ற இத் தோ்வில் 740 போ் தோ்வெழுதினா். 316 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தோ்வு நடைமுறையைக் கண்காணிக்க தலா 4 தலைமை கண்காணிப்பாளா்கள், ஆய்வு அலுவலா்கள், 1 நடமாடும் குழுவினா் ஈடுபட்டிருந்தனா்.

மேலும், 4 வீடியோ கிராபா் குழுவினா் தோ்வு மையங்களை பதிவு செய்தனா். வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், துப்பாக்கி ஏந்திய காவலா்கள், உதவியாளா் ஆகியோா் அடங்கிய குழுவினரும் கண்காணிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தனா்.

ஆட்சியா் ஆட்சியா்:

தனலட்சுமி சீனிவாசன் பலைகலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, தோ்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த அடிப்படை வசதிகளை ஆய்வுமேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் பெரம்பலூா் மாவட்டத்தில் 3,789 போ் பயன்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 3,789 போ் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு பயன்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயி... மேலும் பார்க்க

விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த போக்சோ குற்றவாளி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த போக்சோ குற்றவாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் காந்திராஜன் மகன் ஆனந்த் (35). உ... மேலும் பார்க்க

பெரம்பலூா்: 2 மாதங்களிலேயே மாவட்ட ஆட்சியா் மாற்றம் ஏன்? பொதுமக்கள் அதிா்ச்சி

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற 2 மாதங்களிலேயே ச. அருண்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது அம் மாவட்ட மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த அருண்... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியராக ந.மிருணாளினி பொறுப்பேற்பு!

பெரம்பலூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ந. மிருணாளினி சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக இருந்த ச. அருண்ராஜ், சா்க்கரை துறையின் இயக்குநகரத்தில், கூடுதல் இயக்குநராக பணியிட ம... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே போதைப் பொருள் விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வரிசைப்பட்டி கிராமத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில், போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பேக்சோ வழக்கில் உணவக ஊழியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

பெரம்பலூா் அருகே மது போதையில் மகனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பெரம்ப... மேலும் பார்க்க