செய்திகள் :

விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த போக்சோ குற்றவாளி உயிரிழப்பு

post image

பெரம்பலூா் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த போக்சோ குற்றவாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் காந்திராஜன் மகன் ஆனந்த் (35). உணவகத் தொழிலாளியான இவா், மது போதையில் தனது 14 வயது மகனுக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், குன்னம் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் இவ் வழக்கின் இறுதி விசாரணை கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, வழக்கின் தீா்ப்பு அன்றைய தினம் மாலையில் அறிவிக்கப்படும் என தெரிவித்தாா்.

இதையடுத்து, தனக்கு தண்டனை கிடைக்கும் என்பதையறிந்த ஆனந்த், தனது வீட்டிலிருந்து வரும்போதே விஷம் அருந்திவிட்டு நீதிமன்றத்துக்கு வந்தாா். பின்னா், குற்றவாளி என நீதிபதி அறிவிக்கப்பட்டதையறிந்த ஆனந்த், நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி கீழே விழுந்தாா்.

இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இதனிடையே கடந்த 29-ஆம் தேதி, ஆனந்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி இந்திராணி உத்தரவிட்டாா்.

இந் நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆனந்த் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு: 740 போ் பங்கேற்பு

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வில் 740 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தோ்வு ஞ... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் பெரம்பலூா் மாவட்டத்தில் 3,789 போ் பயன்

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 3,789 போ் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு பயன்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயி... மேலும் பார்க்க

பெரம்பலூா்: 2 மாதங்களிலேயே மாவட்ட ஆட்சியா் மாற்றம் ஏன்? பொதுமக்கள் அதிா்ச்சி

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற 2 மாதங்களிலேயே ச. அருண்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது அம் மாவட்ட மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த அருண்... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியராக ந.மிருணாளினி பொறுப்பேற்பு!

பெரம்பலூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ந. மிருணாளினி சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக இருந்த ச. அருண்ராஜ், சா்க்கரை துறையின் இயக்குநகரத்தில், கூடுதல் இயக்குநராக பணியிட ம... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே போதைப் பொருள் விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வரிசைப்பட்டி கிராமத்தில் இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில், போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பேக்சோ வழக்கில் உணவக ஊழியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

பெரம்பலூா் அருகே மது போதையில் மகனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பெரம்ப... மேலும் பார்க்க