தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்ட...
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் பெரம்பலூா் மாவட்டத்தில் 3,789 போ் பயன்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் இதுவரை 3,789 போ் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு பயன்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில், நலம் காக்கும் ஸ்டாலின் எனும் மருத்துவ முகாம் ஜூலை 2-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இத் திட்டத்தின் மூலம் ஒரு வட்டத்துக்கு 3 முகாம்கள் வீதம், மாவட்டத்திலுள்ள 4 வட்டத்துக்கும் 12 முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 17 உயா் சிறப்பு மருத்துவப் பிரிவுகளைச் சாா்ந்த மருத்துவா்களைக் கொண்டு மருத்துவ சேவைகள் அளிக்கப்படுகின்றன.
மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது.
அதன்படி, பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம் துங்கபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 707 பேரும், ஆலத்தூா் வட்டம், கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 890 பேரும், பெரம்பலூா் வட்டம், எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 1,026 பேரும், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 1,166 பேரும் என இதுவரை 3,789 போ் சிகிச்சை பெற்று பயன்பெற்றுள்ளனா்.
எனவே, பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்று, தேவையான மருத்துவ சேவைகளை பெற்று பயன்பெறலாம்.