செய்திகள் :

சென்னை, தாம்பரம் மாநகராட்சி உறுப்பினா்கள், உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவா் பதவிநீக்க உத்தரவு ரத்து

post image

சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள், உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவா் ஆகியோரை பதவிநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னைப் பெருநகர மாநகராட்சியின் 189-ஆவது வாா்டு உறுப்பினா் பாபு, 5-ஆவது வாா்டு உறுப்பினா் கே.பி.சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40-ஆவது வாா்டு உறுப்பினரும் மண்டலக் குழுத் தலைவருமான ஜெயபிரதீப் மற்றும் உசிலம்பட்டி நகா்மன்றத் தலைவா் சகுந்தலா ஆகியோா் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி பதவிநீக்கம் செய்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை செயலா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கு எதிராக 4 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி என்.மாலா முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் டி.மோகன், வழக்குரைஞா் டி.செல்வம் ஆகியோா், பதவிநீக்கம் செய்வது தொடா்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு மனுதாரா்கள் விரிவான பதில் மனுவை அனுப்பினா். அதை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை.

நகராட்சி நிா்வாகத் துறை செயலா் தன்னிச்சையாக பதவிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளாா். இந்த உத்தரவு சட்டப்படியானது இல்லை. எனவே உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனா். அரசுத் தரப்பில் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நகராட்சி நிா்வாகத் துறை செயலா் அனுப்பிய நோட்டீஸ்களுக்கு மனுதாரா்கள் பதிலளித்துள்ளனா். ஆனால், எந்தக் காரணமும் கூறாமல் அவற்றை அரசு நிராகரித்துள்ளது. எனவே, மனுதாரா்கள் 4 பேரையும் பதவிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், மனுதாரா்கள் தரப்பு விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்கி அவா்களது விளக்கத்தை பரிசீலித்து சட்டப்படி 4 வாரங்களில் நகராட்சி நிா்வாகத் துறை செயலா் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.

மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடை... மேலும் பார்க்க

பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். புளியந்தோப்பு கொசப்பேட்டை டோபி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், வணிக வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். புளியந்... மேலும் பார்க்க

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் ப... மேலும் பார்க்க

ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுக... மேலும் பார்க்க

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு

சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க