செய்திகள் :

கோடையில் அதிகரிக்கும் மின்தேவை: தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க அனுமதி

post image

தமிழகத்தில் கோடையில் அதிகரிக்கும் உச்சநேர மின்தேவையை ஈடுகட்ட 2026 பிப்.1 முதல் மே 15 வரை தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கோர மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 17,000 முதல் 18,000 மெகாவாட்டாக இருந்து வருகிறது. கோடை காலங்களில் தினசரி மின்தேவையானது 20,000 முதல் 22,000 மெகாவாட் வரை அதிகரிப்பது வழக்கம். இத்தகைய காலங்களில், மின்வாரியம் மத்திய தொகுப்பு மற்றும் தனியாா் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்கிறது.

இதன்படி, 2026 பிப்ரவரி முதல் மே 15-ஆம் தேதி வரை, தனியாா் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

2026-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த நேரத்தில் தடையில்லா மின்சாரம் விநியோகிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், பிப்.1 முதல் மே 15 வரை தனியாா் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்க ஆணையத்திடம் மின்வாரியம் அனுமதி கேட்டிருந்தது. அதைப் பரிசீலித்து தனியாா் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்க ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, 2026 பிப்ரவரியில் தினமும் 450 மெகாவாட், மாலை 6 முதல் இரவு 12 வரை உச்சபட்ச நேரத்தில் கூடுதலாக 720 மெகாவாட், மாா்ச்சில் தினமும் 950 மெகாவாட், மாலை முதல் இரவு வரை உச்சபட்ச நேரத்தில் கூடுதலாக 1,520 மெகாவாட் கொள்முதல் செய்யப்படவுள்ளது. ஏப்ரல் முழுவதும் தினமும் 1,500 மெகாவாட், மாலை உச்சபட்ச நேரத்தில் கூடுதலாக 2,400 மெகாவாட் மின்சாரம், மே மாதத்தில் 1முதல் 15-ஆம் தேதி வரை தினமும் 1,500 மெகாவாட், உச்சபட்ச நேரத்தில் கூடுதலாக 2,400 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோருவதற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், பிப்ரவரி முதல் மே வரை தமிழகத்துக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் சிவகாசியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான ந... மேலும் பார்க்க

கீழணையிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவைத்தார் அமைச்சர்!

தஞ்சை கீழணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கி... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை! தொழிலாளிக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

திருவள்ளூரில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய வழக்கில் குற்றவாளிக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் பாதித்தவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் திருவள்ளூர் போக்ஸ... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி!

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,500 கன அடியாக குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிய... மேலும் பார்க்க

இங்கிலாந்து தமிழர்களின் அன்பால் அரவணைக்கப்பட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு இங்கிலாந்து சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக மேற்கொண்டுள்ளார். ஜெர்ம... மேலும் பார்க்க

தமிழக காவலர்கள் மீது கல்வீச்சு: வடமாநில தொழிலாளர்களுக்கு சிறை!

பொன்னேரி அருகே காட்டுப்பள்ளியில் காவலர்கள் மீது கற்களை வீசி வன்முறை தாக்குதலில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.பொன்னேரி அருகே காட்டுப்பள்ளி பகுதியில்... மேலும் பார்க்க