செய்திகள் :

'லேப்டாப் எங்க... தாலிக்கு தங்கம் எங்க..?' - கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

post image

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் மதுரை மேலூரில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் இந்தியா கூட்டணியையும் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 'ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். அந்த கூட்டணியில் காங்கிரஸூம் கம்யூனிஸ்ட்டுகளும் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசி முல்லைப்பெரியாறு பிரச்னையை ஸ்டாலின் தீர்த்திருக்கலாமே? முல்லைப்பெரியாறு 5 மாவட்டங்களின் பிரச்னை. ஆனால், கருணாநிதியின் குடும்பம் மக்களுக்காக ஒன்றும் செய்யாது. குடும்பத்துக்காகத்தான் செய்துகொள்ளும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போயிருக்கிறது. சிறுமி முதல் பாட்டி வரை எந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை. எல்லா இடத்திலும் போதைப்பொருள் ஊடுருவியிருக்கிறது. நகரம் முதல் கிராமம் வரைக்கும் போதைப்பொருள் எளிதில் கிடைக்கிறது.

தாலிக்கு தங்கம் திட்டத்தில் என்ன பிரச்னை? அதை ஏன் நிறுத்தினீர்கள்? அதிமுக அரசு அமைந்தவுடன் தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் தொடங்கப்படும். பெண்களுக்கு ஸ்கூட்டருக்கு மானியமும் பழையபடியே வழங்கப்படும்.

எடப்பாடி பழனிசாமி (File Photo)
எடப்பாடி பழனிசாமி (File Photo)

திமுக 525 தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அதில் 98% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் பச்சைப் பொய் பேசியிருக்கிறார். இது கிராமங்கள் நிறைந்த பகுதி. இங்கே கேட்கிறேன். 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக மாற்றுவோம் என்றாரே மாற்றினாரா? 100 நாள் வேலைத் திட்டத்தின் ஊதியம் உயர்த்தப்படும் என்றாரே செய்தாரா? லேப்டாப் திட்டம் என்ன ஆனது?' என்றார்.

'GST சீர்திருத்தங்கள் சிறு வணிகங்கள் செழிக்க உதவும்' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த தனியார் வங்கியின் நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தனியார் துறை வங்கிகள் இந்தியாவின் தேச கட்டமைப்புக்கு முக்கிய பங்கு வகிக்கின... மேலும் பார்க்க

France: "தினமும் 100 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை"- மருத்துவமனைகளை போருக்கு தயார் செய்வது ஏன்?

ஐரோப்பாவில் இன்னும் ஒரு வருடத்துக்குள் மிகப்பெரிய அளவில் போர் வெடிக்க வாய்ப்புகள் இருப்பதனால், இதுவரை இல்லாத வகையில் மருத்துவமனைகளை தயாராக இருக்கும்படி கூறியுள்ளது பிரான்ஸ் அரசு. ரஷ்யா மற்றும் உக்ரைன்... மேலும் பார்க்க

ADMK : மதிக்காத EPS விலகும் செங்கோட்டையன்? | TVK : Vijay -க்கு Srilanka அரசு பதிலடி |Imperfect Show

* அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்?* வெள்ள பாதிப்பு- பஞ்சாப் முதல்வருடன் மோடி பேச்சு!* ஜம்மு காஷ்மீரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அமித் ஷா?* மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை...... மேலும் பார்க்க

"வெள்ள நீரை வீட்டில் சேமியுங்கள்; அணை கட்ட 10 வருடங்கள் ஆகும்" - பாகிஸ்தான் அமைச்சர் யோசனை

பாகிஸ்தானில் பெய்த வரலாறு காணாத பருவமழையால், 150 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்நாட்டின் முக்கிய கோதுமை உற்பத்தி மாகாணமான பஞ்சாப் மாகாணம் வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது.அந்நாட்டு ஊடக தகவலின்படி, கனமழை ... மேலும் பார்க்க

மனோஜ் ஜராங்கே கோரிக்கையை ஏற்ற அரசு; முடிவுக்கு வரும் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம்!

மராத்தா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே 30 ஆயிரம் மராத்தா இன மக்களோடு சேர்ந்து மும்பையில் கடந்த 29ம் தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மும்பையின் தென்பகுதியில் உள்... மேலும் பார்க்க