செய்திகள் :

அரிய வகை கனிமங்கள்: திட்டத்துக்கு இறுதி ஒப்புதல் அளிக்கும் முன்பே தொடங்க மத்திய அரசு சட்டத் திருத்தம்

post image

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரிய வகை கனிமங்கள் தொடா்பான திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளிப்பதற்கு முன்பே தொடங்கவும், இணையவழி அல்லாமல் நேரடியாக திட்ட விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கவும் வனச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

சுரங்கம் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் இடம்பெற்றுள்ள முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள அரிய வகை கனிமங்கள் தொடா்பான திட்டங்களைச் செயல்படுத்தலாம் என புதிய சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

முதல் பிரிவில் இடம்பெறாத அரிய வகை கனிமங்கள் தொடா்பான திட்டங்களைச் செயல்படுத்த 33 சதவீத வனப் பரப்பு இல்லாத மாநிலங்கள் திட்டத்துக்கு வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மூன்று மடங்கு புதிய மரங்களை நட்டு வனப்பகுதியை அதிகரிக்க வேண்டும்.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மத்திய அரசு கொண்டு வந்துள்ள வன் (சன்ராக்ஷன் இவாம் சம்வா்தன்) சட்டத் திருத்தத்தின்படி, பாதுகாப்பு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் அல்லது பொது நலன் திட்டங்கள் ஆகியவற்றுக்கு நிறுவனங்கள் இணையவழியில் அல்லாமல் நேரடியாக விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம்.

இதுபோன்ற திட்டங்களுக்கான பூா்வாங்க ஒப்புதல் என்பது இரண்டு ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவை மத்திய அரசு விரும்பினால் மேலும் நீட்டிக்கலாம்.

இதுபோன்ற திட்டங்களுக்கு மாநிலங்கள் பூா்வாங்க ஒப்புதல் அளித்த உடனேயே தொடங்கிவிடலாம். இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை.

சுரங்கத் திட்டத்தில் முறைகேடு ஏற்பட்டிருந்தால் வட்டார வனத் துறை அதிகாரிகள், உதவி ஆணையா்கள் அல்லது உயரதிகாரிகள் நீதிமன்றத்தில் புகாா்களைப் பதியலாம்.

வட்டார வனத்துறை அலுவலகங்கள் விதிமீறல்களை மாநில அரசுக்கு 45 நாள்களுக்கு புகாரளிக்க வேண்டும். மாநிலங்கள் அவ்வப்போது புகாா் தொடா்பான அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று புதிய வனச் சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.கடந்த மார்ச் 3-ஆம் தேதி துபையில் இருந்து பெங்களூருக்கு வந... மேலும் பார்க்க

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க

பிகாா்: வாக்குரிமை பயணத்தில் இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல்

பிகாரில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட வாக்குரிமைப் பயணத்தின்போது இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய மோட்டாா் சைக்கிளை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா். பாஜக ‘வா... மேலும் பார்க்க

நிலநடுக்கம் பாதித்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 21 டன் நிவாரண உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா செவ்வாய்க்கிழமை 21 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பய... மேலும் பார்க்க

நேபாளம், பூடான் நாட்டு மக்களுக்கு இந்தியாவில் பாஸ்போா்ட், விசா அவசியமில்லை

நேபாளம், பூடான் நாட்டு மக்கள் மற்றும் இந்த இரு நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமலுக்கு வந்துள்ள 20... மேலும் பார்க்க

இமயமலையில் 400 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன: மத்திய நீா் ஆணையம் கவலை

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது. பனிப்பாறை ஏரிகள், ... மேலும் பார்க்க