செய்திகள் :

``இந்தியா உடனான உங்களது உறவை மதிக்கிறேன்; ஆனால்'' - புதினிடம் பாகிஸ்தான் பிரதமர் பேசியது என்ன?

post image

கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை என இரு நாள்களாக சீனாவின் தியான்ஜின்னில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நடைபெற்றது.

அதில் பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரின் சந்திப்பு உலக அரங்கின் ஹைலைட்டாக அமைந்தது.

இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் கலந்துகொண்டார்.

புதின் - ஷெபாஸ் ஷெரீப் - மோடி
புதின் - ஷெபாஸ் ஷெரீப் - மோடி

புதின் - ஷெபாஸ் சந்திப்பு

நேற்று புதின் மற்றும் ஷெபாஸ் ஷெரீப் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது ஷெபாஸ் ஷெரீப் புடினிடம், “பாகிஸ்தானுக்கு நீங்கள் வழங்கும் ஆதரவிற்கும், எங்களது பிராந்தியத்தில் சமநிலையாக நீங்கள் நடந்து கொள்வதற்கும் நன்றி.

உங்களுக்கும், இந்தியாவிற்கும் இடையே உள்ள உறவை நான் மதிக்கிறேன்.

ஆனால், நாங்களும் உங்களுடன் வலுவான உறவினை கட்டமைக்க விரும்புகிறோம்.

இந்த உறவு எங்களது பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்கு துணைபுரியும் வகையில் இருக்கும்” என்று பேசியுள்ளார்.

ட்ரம்ப் - புதின் - பாகிஸ்தான்!

இந்த உச்சி மாநாடு முடிந்து, கடந்த திங்கட்கிழமையே இந்தியா திரும்பிவிட்டார் மோடி. ஆனால், உச்சி மாநாட்டில் மோடி மற்றும் புதின் நட்பு பெரிதும் கவனிக்கப்பட்டது.

இதற்கு முக்கிய காரணம், ரஷ்யா உடன் வணிகம் செய்து வருவதால், இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரி.

பாகிஸ்தான் ட்ரம்பிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் தொடரும் நிலையில், புதினிடம் தற்போது உதவி கேட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தெருநாய் விவகாரம்: `தீர்வு ரொம்ப சிம்பிள்ங்க' - எம்.பி கமல்ஹாசன் சொல்வதென்ன?

தமிழ்நாட்டில் தற்போது விவாதமாகியிருக்கும் சிக்கலில் ஒன்று தெருநாய் விவகாரம். இந்தியாவிலேயே ரேபிஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் ஒன்று. எனவே தெருநாய்கள் விவகாரத்தில் உடனடியாக... மேலும் பார்க்க

'GST சீர்திருத்தங்கள் சிறு வணிகங்கள் செழிக்க உதவும்' - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த தனியார் வங்கியின் நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தனியார் துறை வங்கிகள் இந்தியாவின் தேச கட்டமைப்புக்கு முக்கிய பங்கு வகிக்கின... மேலும் பார்க்க

France: "தினமும் 100 ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை"- மருத்துவமனைகளை போருக்கு தயார் செய்வது ஏன்?

ஐரோப்பாவில் இன்னும் ஒரு வருடத்துக்குள் மிகப்பெரிய அளவில் போர் வெடிக்க வாய்ப்புகள் இருப்பதனால், இதுவரை இல்லாத வகையில் மருத்துவமனைகளை தயாராக இருக்கும்படி கூறியுள்ளது பிரான்ஸ் அரசு. ரஷ்யா மற்றும் உக்ரைன்... மேலும் பார்க்க

ADMK : மதிக்காத EPS விலகும் செங்கோட்டையன்? | TVK : Vijay -க்கு Srilanka அரசு பதிலடி |Imperfect Show

* அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்?* வெள்ள பாதிப்பு- பஞ்சாப் முதல்வருடன் மோடி பேச்சு!* ஜம்மு காஷ்மீரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அமித் ஷா?* மோடி இது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை...... மேலும் பார்க்க