திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்பு!
ஜம்மு, ஹிமாச்சல், பஞ்சாபிற்கு தொடரும் சிவப்பு எச்சரிக்கை!
வட மாநிலங்களைப் புரட்டிப்போட்டு வரும் கனமழை வெள்ளம் தொடர்வதால் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் ஆகிய 3 மாநிலங்களுக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக வட மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. கொட்டிதீர்த்துவரும் இந்த கனமழையால் ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், பஞ்சாப், ஹிமாச்சல் உள்ளிட்ட பல மாநிலங்கள் படுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் மாநிலம் உருகுளைந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களிலும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவத்தினரும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.