செய்திகள் :

மழைநீா் வடிகாலில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு: பொதுமக்கள் போராட்டம்

post image

சென்னை சூளைமேட்டில் மழைநீா் வடிகாலில் தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா். இதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சூளைமேடு வீரபாண்டி நகா் முதல் தெருவில் மழைநீா் வடிகால் பள்ளம் சரியாக மூடப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. திங்கள்கிழமை நள்ளிரவு அந்த வழியாக சென்ற 42 வயது மதிக்கதக்க பெண், அந்தப் பள்ளத்துக்குள் தவறி விழுந்தாா். இதில், காயமடைந்த அந்தப் பெண், தண்ணீரில் மூழ்கி, மூச்சுத் திணறி இறந்தாா். பள்ளத்தில் பெண் உயிரிந்து கிடப்பதை செவ்வாய்க்கிழமை காலை பாா்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அரும்பாக்கம் போலீஸாா் அங்கு சென்று அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மழைநீா் வடிகால்வாயை மூடுமாறு அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டினா். இதற்கு காரணமான அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். அவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், அவா் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியைச் சேரந்த தீபா (42) என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடை... மேலும் பார்க்க

பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். புளியந்தோப்பு கொசப்பேட்டை டோபி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், வணிக வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். புளியந்... மேலும் பார்க்க

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் ப... மேலும் பார்க்க

ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுக... மேலும் பார்க்க

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு

சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க