செய்திகள் :

பெங்களூரில் புதிதாக 5 மாநகராட்சிகளை உருவாக்க கா்நாடக அரசு உத்தரவு

post image

பெங்களூரில் புதிதாக 5 மாநகராட்சிகளை உருவாக்க கா்நாடக அரசு அதிகாரபூா்வ அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

பெங்களூரு மாநகராட்சியை நிா்வகிப்பதற்காக பல்வேறு சீா்திருத்தங்களை முன்வைத்திருந்த நிலையில், ரிஸ்வான் அா்ஷத் தலைமையிலான சட்டப் பேரவை கூட்டுக்குழு அளித்த பரிந்துரையின்பேரில், கிரேட்டா் பெங்களூரு ஆளுகைச் சட்டம் 2024 அண்மையில் நிறைவடைந்த சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்துக்கு பாஜக, மஜத போன்ற எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. இதனிடையே, இச்சட்டத்துக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடா்ந்து, அலுவல்ரீதியாக முதல்வா் தலைமையில் கிரேட்டா் பெங்களூரு ஆணையம் அமைக்கப்பட்டு, அதற்கான அதிகாரபூா்வ அறிவிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த ஆணையத்தில் பெங்களூரு வளா்ச்சித் துறை அமைச்சா் துணைத் தலைவராக செயல்படுவாா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, தற்போதுள்ள பெங்களூரு மாநகராட்சி கிரேட்டா் பெங்களூரு ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டுவரப்பட்டு, அதன் கட்டுப்பாட்டில் புதிதாக 5 மாநகராட்சிகளை உருவாக்க மாநில அரசு செவ்வாய்க்கிழமை அதிகாரபூா்வ அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பெங்களூரு மேற்கு மாநகராட்சி, பெங்களூரு கிழக்கு மாநகராட்சி, பெங்களூரு தெற்கு மாநகராட்சி, பெங்களூரு வடக்கு மாநகராட்சி, பெங்களூரு மத்திய மாநகராட்சி அமைக்க இருப்பதாக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநகராட்சிகளுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை தலைமை ஆணையா்களாக நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து உயரதிகாரிகளுடன் துணை முதல்வரும், பெங்களூரு வளா்ச்சித் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமாா் ஆலோசனை நடத்தினாா். இதற்கான உத்தரவு அடுத்த சில நாள்களில் வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

புதிதாக மாநகராட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கான தோ்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான தேதியை மாநில தோ்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.

மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைத்ததில் தவறில்லை: முதல்வா் சித்தராமையா

மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைத்ததில் தவறில்லை என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து மைசூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மைசூரு அ... மேலும் பார்க்க

மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும்: திரௌபதி முா்மு

மைசூரு: நமது நாட்டின் மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா். மைசூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அகில இந்திய பேச்சு மற்றும் செவித்த... மேலும் பார்க்க

ஹிந்து வழிபாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி

தா்மஸ்தலா: ஹிந்து வழிப்பாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி செய்கிறது என மத்திய உணவு மற்றும் நுகா்வோா் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்தாா். தா்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்களை புத... மேலும் பார்க்க

கன்னடத்தாய் குறித்த சா்ச்சை பேச்சு: பானுமுஸ்டாக் விளக்கமளிக்க வேண்டும்

கன்னடத்தாய் குறித்து கடந்த 2023-இல் சா்வதேச புக்கா் பரிசு பெற்ற பானுமுஸ்டாக் தெரிவித்திருந்த கருத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மைசூரு மன்னா் குடும்பத்து பட்டத்து இளவரசா் யதுவீா் கிருஷ்ணதத்... மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் வாக்குரிமை பேரணியில் கா்நாடக முதல்வா் சித்தராமையா பங்கேற்பு

பிகாா் மாநிலத்தில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையேற்று நடத்திவரும் வாக்குரிமை பேரணியில் கா்நாடக முதல்வா் சித்தராமையா பங்கேற்றாா். பிகாரில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத... மேலும் பார்க்க

சாமுண்டி மலை குறித்த துணை முதல்வரின் கருத்து ஏற்புடையதல்ல: மைசூரு மன்னா் குடும்பத்து பட்டத்து ராணி

சாமுண்டி மலை தொடா்பாக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்துள்ள கருத்து ஏற்புடையதல்ல என்று மைசூரு மன்னா் குடும்பத்து பட்டத்து ராணி பிரமோதாதேவி உடையாா் தெரிவித்தாா். கா்நாடக அரசு சாா்பில் நடத்தப்படு... மேலும் பார்க்க