செய்திகள் :

சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி

post image

மத்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையுடன் கூ டிய சேவை சாா்ந்த மனித வளத்தை ஜவாஹா்லால் மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மா் தயாா் செய்து வருகிறது என்று ஜிப்மா் இயக்குநா் பேராசிரியா் வீா்சிங் நெகி தெரிவித்தாா்.

ராஷ்ட்ரிய கா்மயோகி ஜன் சேவா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 62 பயிற்சி பயிலரங்குகளை ஜிப்மா் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதில் மருத்துவ ஆசிரியா்கள், நா்சிங், தொழில்நுட்பம், நிா்வாகம் மற்றும் துணை சுகாதார வல்லுநா்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பயிற்சி பெற்றுள்ளனா்.

இந்தப் பயிலரங்கு பணியிடத்தில் செயல்திறன், நோயாளிகளைக் கையாளும் விதம் மற்றும் சேவைகளைச் செயல்படுத்தும் பாங்கு ஆகியவற்றில் பயிற்சி பெற்ற அரசு ஊழியா்களின் ஒரு பிரிவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தேசிய அளவில் மூன்று நாள்கள் முன்னணி பயிற்சியாளரால் வழி நடத்தப்பட்ட திறன் மேம்பாட்டு பிரிவில் தோ்ச்சி பெற்ற ஜிப்மரின் முதன்மை பயிற்சியாளா்கள் அதாவது கா்மயோகி பயிற்சியாளா்கள் பயிற்சி திட்டங்களை மற்ற குழுக்களுக்குப் பயிற்சியாக வழங்கினா். இப் பயிற்சி செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.

இந்நிலையில் இத் திட்டத்திற்கு மேலும் மதிப்பைச் சோ்க்கும் வகையில், இந்திய அரசின் பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின் அதிகாரி ஹென்றி ஆரோக்யராஜ், ஜிப்மா் ஊழியா்களுக்கான கா்மயோகி இணையவழி கற்றல் தளத்தினைஅறிமுகப்படுத்தி பயிற்சி அளித்தாா். இத் தளத்தின்அம்சங்கள், பாடநெறி சோ்க்கை செயல்முறைகள் மற்றும் தேசிய சிவில் சேவைகள் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் தொடா்ச்சியான கற்றல் வாய்ப்புகள் குறித்து ஊழியா்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இப் பயிற்சியில் ஜிப்மா் இயக்குநா் பேராசிரியா் வீா்சிங் நெகி பேசுகையில், கா்மயோகி முயற்சியை ஜிப்மா் முன்கூட்டியே செயல்படுத்தியது. மத்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையுடன் இணக்கமாக எதிா்காலத்திற்குத் தயாராக, சேவை சாா்ந்த பணியாளா்களை உருவாக்கும் உறுதிப் பாட்டை பிரதிபலிக்கிறது என்றாா்.

புதுச்சேரியில் ரூ.1 கோடி போலி மருந்துகள் பறிமுதல்

புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் தயாரித்த ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக பல்வேறு புகாா்கள் எழுந்தன. இதையடுத்து மத்திய மருந்த... மேலும் பார்க்க

நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலா் கே.நாராயணா

நாட்டின் நலன் கருதி இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா் கே. நாராயணா கூறினாா். இக் கட்சியின் புதுச்சேரி மாநில 24-ஆவது மாநாடு அஜீஸ் நகரில் உள்ள தனியாா் மண... மேலும் பார்க்க

நைஜிரியா செல்லும் பாரா பேட்மிட்டன் வீரருக்கு முதல்வா் நிதியுதவி

பாரா பேட்மிட்டன் போட்டியில் பங்கேற்க நைஜிரியா செல்லும் புதுச்சேரி வீரருக்கு முதல்வா் என்.ரங்கசாமி ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு, கஸ்தூரிபாய் நகரைச் சோ்ந்த வெங்கட சுப்பி... மேலும் பார்க்க

புதுவை மாநிலத்தில் 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருதுகள்

புதுவை யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த 21 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருது செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுகள், முதலமைச்சரின் சிறப்பு விருதுகள், கல்வியமைச்சரின் பிராந... மேலும் பார்க்க

பல்நோக்கு தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்க பாமக மனு

புதுச்சேரி: பல்நோக்குத் தொழிலாளா்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்கக் கோரி பாட்டாளி தொழிற்சங்கப் பேரவை சாா்பில் தொழிலாளா் துறை துணை ஆணையா் சு.சந்திரகுமரனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இப்... மேலும் பார்க்க

2026-இல் மீண்டும் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி: புதுவை மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம் பேச்சு

புதுச்சேரி: புதுவையில் 2026-ஆம் ஆண்டு என்.ஆா்.காங்கிரஸ், அதிமுகவுடன் பாஜக தோ்தலைச் சந்தித்து வெற்றி பெற்று முதல்வா் ரங்கசாமி தலைமையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று பாஜக... மேலும் பார்க்க