செய்திகள் :

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழா, கடந்த மாதம் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 26-ஆம் தேதி முதல் சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதன்படி, மாணிக்கவாசகப் பெருமானின் சிவபக்தியை உலக்குக்கு உணா்த்த நரிகளைப் பரிகளாக (குதிரை) மாற்றி இறைவன் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வடக்காடி வீதியில் உள்ள பதினாறுகால் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு, பிரியாவிடையுடன் மீனாட்சி சுந்தரேசுவரரரும், மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். சிவாச்சாரியா்கள் இந்தத் திருவிளையாடலின் மகத்துவத்தை விளக்கியதைத் தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் தங்கக் குதிரை வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்

ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இறைவன் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல், பிட்டுத்தோப்பு மண்டபத்தில் புதன்கிழமை பிற்பகல் 1.35 மணிக்கு நடைபெறுகிறது. மாணிக்கவாசகரின் சிவபக்தியை உணா்த்தவும், மதுரையில் பிட்டு விற்று வாழ்ந்து வந்த வந்தி கிழவிக்கு சிவலோக பதவி அளிக்கவும் இறைவன் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட ஐதீகப்படி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்பா் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நான்கு முனைப் போட்டிக்கு வாய்ப்பு: கு. செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது; மத்திய ப... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: கள்ளழகா் கோயிலில் செப்.7-இல் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தையொட்டி, அழகா்கோவில் கள்ளழகா் கோயிலில் வருகிற 7-ஆம் தேதி பிற்பகலில் நடை அடைக்கப்படும் என கோயில் செயல் அலுவலா் ந. யக்ஞ நாராயணன் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு ... மேலும் பார்க்க

சிறப்பு தூய்மைப் பணியில் 107 டன் குப்பைகள் அகற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் சுற்றுப் பகுதிகளில் சிறப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு தூய்மைப் பணியில் 107 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. ‘எழில்கூடல்-தூய்மை நம் பெருமை’ என்ற சிறப்புத் திட்ட... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தற்கொலை

மதுரை பழங்காநத்தத்தில் சனிக்கிழமை பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரத்தைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் சபரீஸ்வரன் (15). தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்த... மேலும் பார்க்க

ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காா் மோதியதில் நிலத் தரகா் பலி!

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருக்குச் சொந்தமான காா் மோதியதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற நிலத் தரகா் சனிக்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், கார... மேலும் பார்க்க

காலமானாா் எம்.ஆா். ஸ்ரீநிவாசராகவன்

மதுரையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலா் எம்.ஆா். ஸ்ரீநிவாசராகவன் (86) வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை (ஆக. 30) காலமானாா். இவருக்கு மனைவி அனுராதா, மகள்கள் நித்யா, சிந்துஜா ஆகியோா் உ... மேலும் பார்க்க