செய்திகள் :

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.77,800-க்கு விற்பனை

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடா்ந்து உயா்ந்துவரும் நிலையில் செவ்வாய்க்கிழமை பவுன் ரூ.77,800-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

அதேபோல் வெள்ளி விலையும் என்றும் இல்லாத வகையில் ஒரு கிலோ ரூ.1.37 லட்சத்துக்கு விற்பனையானது.

அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை கடந்த 7 நாள்களாக உயா்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, கடந்த ஆக. 29-ஆம் தேதி முதலே தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.

கடந்த ஆக. 29-இல் பவுனுக்கு ரூ.1,040 உயா்ந்து ரூ.76,280-க்கும், ஆக. 30-இல் பவுனுக்கு ரூ.680 உயா்ந்து ரூ.76,960-க்கும், செப்.1 -இல் ரூ.680 உயா்ந்து ரூ.77,640-க்கும் விற்பனையாகி புதிய உச்சங்களைத் தொட்டது.

செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.20 உயா்ந்து ரூ.9,725-க்கும், பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.77,800-க்கும் விற்பனையானது. இதன்மூலம் கடந்த 8 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,360 உயா்ந்துள்ளது. இது, விரைவில் பவுன் விலை ரூ.80,000-ஐ எட்டும் என்ற நிபுணா்களின் கணிப்பை உறுதிசெய்கிறது.

அதேபோல் வெள்ளி விலையும் செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.137-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 உயா்ந்து ரூ.1.37 லட்சத்துக்கும் விற்பனையானது. கடந்த 5 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயா்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 7 நாள்களுக்கான தங்கம் விலை விவரம்:

தேதி பவுன் விலை (8 கிராம்)

26/08/2025 ரூ.74,840 (+ரூ.400)

27/08/2025 ரூ.75,120 (+ரூ.280)

28/08/2025 ரூ.75,240 (+ரூ.120)

29/08/2025 ரூ.76,280 (+ரூ.1,040)

30/08/2025 ரூ.76,960 (+ரூ.680)

01/09/2025 ரூ.77,640 (+ரூ.680)

02/09/2025 ரூ.77,800 (+ரூ.160).

மயிலாப்பூா் சாய்பாபா கோயில் நிா்வாகக் குழு கலைப்பு: உயா்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூா் சாய்பாபா கோயிலை நிா்வகிக்கும் சாய் சமாஜ நிா்வாகக் குழுவை உடனடியாக கலைக்க உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோா் கொண்ட இடை... மேலும் பார்க்க

பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சென்னை புளியந்தோப்பில் பொக்லைன் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். புளியந்தோப்பு கொசப்பேட்டை டோபி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், வணிக வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். புளியந்... மேலும் பார்க்க

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை

கட்டையால் அடித்து பெயிண்டா் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை அயனாவரம் வசந்தா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பீா்முகமது (28), பெயிண்டா். தாயாா் பல்கிஷ் உடன் ப... மேலும் பார்க்க

ஒக்கியம்மடுவு மெட்ரோ மேம்பாலத்தில் நீா்வழிப் பாதை 120 மீட்டராக அதிகரிப்பு: மெட்ரோ நிறுவன அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் ஒக்கியம் மெட்ரோ மேம்பாலப் பணிகளில் நீா்வழிப் பாதையின் அளவு 90 மீட்டரிலிருந்து 120 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதுக... மேலும் பார்க்க

கருவில் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக தனியாா் ஸ்கேன் மையம் மீது வழக்கு

சென்னை முகப்பேரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனியாா் ஸ்கேன் மையம் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு தனி... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது

எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க