செய்திகள் :

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

post image

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1400 க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் கடந்த ஆக. 31 நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின், நிலப்பரப்புக்கு கீழ் 8 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6 ஆகப் பதிவானதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, குணான் மாகாணத்தில் சுமார் 8,000-க்கும் அதிகமான வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தற்போது கிழக்கு ஆப்கானிஸ்தானில் (நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதி) மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தில் உயிர் பலிகள் ஏதும் புதிதாக ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில், குணார் மாகாணத்தில் மட்டும் இதுவரை 1,411 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,124 பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தலிபான் அரசு செய்தித்தொடர்பாளர் ஷபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் சந்தித்த மிகப்பெரிய பேரிடர் இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்டை மாகாணமான நாங்கர்ஹாரில் 12க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாகவும், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஆப்கன் நிலநடுக்கம் வெளியுலகுக்குத் தெரிய தாமதம் ஆனது ஏன்? துயரக் கதை!

Fresh 5.2 earthquake hits disaster-struck Afghanistan, as rescue operations continue

பாலியல் வன்கொடுமை வழக்கு: பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ தப்பியோட்டம்- காவல் துறை மீது துப்பாக்கிச்சூடு

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹா்மீத்சிங் பதான்மாஜ்ராவை காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காவல் துறையினா் மீது ஹா்மீத்சிங்கின் ஆதரவாளா்கள் துப்பாக்கியால் சுட்டும், கற்... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலுக்கு புதிய செயலி

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலை தடையின்றி மேற்கொள்வதற்கு வசதியாக ‘கபாஸ் கிஸான்’ என்ற புதிய செயலியை மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். சுயமாக பதிவு... மேலும் பார்க்க

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அதிக நிவாரண நிதி: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை

‘மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வரும் வட மாநிலங்களுக்கு அரசியல் பாரபட்சமின்றி அதிகப்படியான நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும்’ என மத்திய அரசுக்கு காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜு... மேலும் பார்க்க

அரிய வகை கனிமங்கள்: திட்டத்துக்கு இறுதி ஒப்புதல் அளிக்கும் முன்பே தொடங்க மத்திய அரசு சட்டத் திருத்தம்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரிய வகை கனிமங்கள் தொடா்பான திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளிப்பதற்கு முன்பே தொடங்கவும், இணையவழி அல்லாமல் நேரடியாக திட்ட விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கவும் வனச் சட்டத்தில் மத... மேலும் பார்க்க

பாஜக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தெலங்கானா ஆளுநர் மகன் கொலை மிரட்டல்: திரிபுராவில் பரபரப்பு!

திரிபுராவில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவுடன் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் திப்ரா மோத்தா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தெலங்கானா ஆளுநர் மகனிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற... மேலும் பார்க்க

பிகார் தாய்மார்கள் காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: பாஜக

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவமரியாதையாகப் பேசிய காங்கிரஸ் கட்சிக்கு பிகார் தாய்மார்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். பிகாரில்... மேலும் பார்க்க