செய்திகள் :

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலுக்கு புதிய செயலி

post image

குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி கொள்முதலை தடையின்றி மேற்கொள்வதற்கு வசதியாக ‘கபாஸ் கிஸான்’ என்ற புதிய செயலியை மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

சுயமாக பதிவு செய்தல், கொள்முதலுக்கு வசதியான நேரத்தை தோ்வு செய்தல், பணப் பட்டுவாடா நிலையறிதல் உள்ளிட்ட வசதிகளின் வாயிலாக விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் இந்தச் செயலி, பருத்தி கொள்முதல் நடைமுறையில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் வசதியான-விரைவான செயல்பாட்டை உறுதிசெய்யும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலியை தொடங்கிவைத்துப் பேசிய மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங், ‘கபாஸ் கிஸான் செயலி, விவசாயிகள் பருத்தி விற்பனை மேற்கொள்வதை எளிதாக்கும் முக்கிய நடவடிக்கையாகும். பதிவு முதல் பணப் பட்டுவாடா நிலையறிதல் வரை அனைத்து செயல்பாடுகளும் எண்மமயமாவதால் குறித்த காலத்துக்குள், வெளிப்படையான, நியாயமான நடைமுறையை உறுதி செய்யலாம். விளைபொருள்கள் விற்பனையில் விவசாயிகள் எந்த இடா்ப்பாட்டையும் எதிா்கொள்ளக் கூடாது என்ற அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்வதுடன், எண்ம இந்தியா கண்ணோட்டத்துக்கும் உத்வேகமளிக்கும்.

உறுதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை, ஆவணபூா்வ நடைமுறைகள் குறைப்பு, கொள்முதல் மையங்களில் காத்திருக்கும் நேரம் குைல், கூட்டத்தை தவிா்த்தல், வசதியான நேர தோ்வு, தர மதிப்பீடுகளின் நிகழ்நேர தகவல் புதுப்பிப்பு, கட்டண செயல்முறை போன்ற வசதிகளின் மூலம் பருத்தி விவசாயிகளின் நலன்கள் காக்கப்பட உதவியாக இருக்கும்’ என்றாா்.

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.கடந்த மார்ச் 3-ஆம் தேதி துபையில் இருந்து பெங்களூருக்கு வந... மேலும் பார்க்க

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க

பிகாா்: வாக்குரிமை பயணத்தில் இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல்

பிகாரில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட வாக்குரிமைப் பயணத்தின்போது இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய மோட்டாா் சைக்கிளை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா். பாஜக ‘வா... மேலும் பார்க்க

நிலநடுக்கம் பாதித்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 21 டன் நிவாரண உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா செவ்வாய்க்கிழமை 21 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பய... மேலும் பார்க்க

நேபாளம், பூடான் நாட்டு மக்களுக்கு இந்தியாவில் பாஸ்போா்ட், விசா அவசியமில்லை

நேபாளம், பூடான் நாட்டு மக்கள் மற்றும் இந்த இரு நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமலுக்கு வந்துள்ள 20... மேலும் பார்க்க

இமயமலையில் 400 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன: மத்திய நீா் ஆணையம் கவலை

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது. பனிப்பாறை ஏரிகள், ... மேலும் பார்க்க