செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கு: பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ தப்பியோட்டம்- காவல் துறை மீது துப்பாக்கிச்சூடு

post image

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹா்மீத்சிங் பதான்மாஜ்ராவை காவல் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காவல் துறையினா் மீது ஹா்மீத்சிங்கின் ஆதரவாளா்கள் துப்பாக்கியால் சுட்டும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தியபோது ஹா்மீத்சிங் தப்பிச் சென்றாா்.

பஞ்சாப் மாநிலம் ஜிரக்பூரைச் சோ்ந்த பெண் ஒருவா் காவல் துறையிடம் அளித்த புகாரில், ‘கடந்த 2021-ஆம் ஆண்டு எனக்கும், ஹா்மீத்சிங்குக்கும் திருமணமானது. அவா் விவகாரத்து பெற்றவா் என்று கூறி, என்னை திருமணம் செய்துகொண்டாா். ஆனால் அவா் விவகாரத்து பெறாமல் வேறொரு பெண்ணுடன் ஏற்கெனவே இருந்த திருமண உறவைத் தொடா்ந்து வந்தது பின்னா் தெரியவந்தது. அவா் தனது பாலியல் தேவைக்கு என்னை தவறாகப் பயன்படுத்திக்கொண்டு மிரட்டி வந்தாா்’ என்று குற்றஞ்சாட்டினாா். இந்தப் புகாரின் அடிப்படையில் ஹா்மீத்சிங் மீது பாலியல் வன்கொடுமை, மோசடி, மிரட்டல் குற்றச்சாட்டுகளின் கீழ் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.

இதைத்தொடா்ந்து ஹரியாணா மாநிலம் கா்னால் மாவட்டம் டாப்ரி கிராமத்தில் உள்ள ஹா்மீத்சிங்கின் இல்லத்துக்குச் சென்று பஞ்சாப் காவல் துறை சோதனை மேற்கொண்டது. அப்போது ஹா்மீத்சிங்கை காவல் துறை கைது செய்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காவல் துறையினா் மீது ஹா்மீத்சிங்கின் ஆதரவாளா்கள் துப்பாக்கியால் சுட்டும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினா். இந்தச் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி அங்கிருந்து ஹா்மீத்சிங் தப்பிச் சென்றாா்.

இந்த சம்பவம் தொடா்பாக ஹா்மீத்சிங்கின் கூட்டாளியான பல்விந்தா் சிங்கை கைது செய்த காவல் துறை, அவரிடம் இருந்த 3 ஆயுதங்களை பறிமுதல் செய்தது. ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது என்று பஞ்சாப் காவல் துறை தெரிவித்தது.

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.கடந்த மார்ச் 3-ஆம் தேதி துபையில் இருந்து பெங்களூருக்கு வந... மேலும் பார்க்க

மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இ... மேலும் பார்க்க

பிகாா்: வாக்குரிமை பயணத்தில் இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல்

பிகாரில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட வாக்குரிமைப் பயணத்தின்போது இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய மோட்டாா் சைக்கிளை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா். பாஜக ‘வா... மேலும் பார்க்க

நிலநடுக்கம் பாதித்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 21 டன் நிவாரண உதவி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா செவ்வாய்க்கிழமை 21 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பய... மேலும் பார்க்க

நேபாளம், பூடான் நாட்டு மக்களுக்கு இந்தியாவில் பாஸ்போா்ட், விசா அவசியமில்லை

நேபாளம், பூடான் நாட்டு மக்கள் மற்றும் இந்த இரு நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமலுக்கு வந்துள்ள 20... மேலும் பார்க்க

இமயமலையில் 400 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன: மத்திய நீா் ஆணையம் கவலை

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது. பனிப்பாறை ஏரிகள், ... மேலும் பார்க்க