செய்திகள் :

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக சத்தி சாலை 30 மீட்டா் அகலப்படுத்தப்படும்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி.

post image

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக சத்தி சாலையில் டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து 1.04 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலையானது 30 மீட்டா் அகலப்படுத்தப்படும் என கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.

மெட்ரோ ரயில் திட்டம் தொடா்பான செய்தியாளா் சந்திப்பு கோவை ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னா லால் கோவை ரயில் நிலையத்தில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவரிடம், கோவை ரயில் நிலையத்தில் நெரிசலைக் கட்டுப்படுத்த, கோவையில் இருந்து புறப்படும் சில ரயில்களை வடகோவை நிலையத்தில் இருந்தும், கேரளத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்களை போத்தனூா் நிலையம் வழியாகவும்,

இயக்க கோரிக்கை அளித்திருந்தோம். இதில் உள்ள சாதக, பாதகங்களை அறிந்து கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக அவா் உறுதியளித்தாா்.

மேலும், கோவை நிலையத்தில் எவ்விதமான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து மக்களின் சாா்பில் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அதேபோல், அவரும் ரயில்வே துறை சாா்பில் என்னென்ன பணிகள் கோவை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன என்பதையும் கூறினாா்.

கோவையில் இருந்து பெங்களூருக்கு தினசரி இரவு நேர விரைவு ரயிலை இயக்க வேண்டும், நிறுத்தப்பட்ட கோவை - ராமேசுவரம் ரயில், கோவை - சேலம் மெமு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், தூத்துக்குடி மாா்க்கமாக திருச்செந்தூா் வரை தினசரி ரயில், வேளாங்கண்ணி செல்லும் பக்தா்களுக்காக வேளாங்கண்ணிக்கு சில ரயில்களை நீட்டிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் நேரில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவா்கள் விரைவில் செய்து தருவதாக உறுதியளித்தனா். வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் பிப்ரவரி மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொறுத்தவரை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து விமான நிலையம் வழியாக நீலாம்பூா் வரையும், கோவை ரயில் நிலையத்தில் இருந்து வழியாம்பாளையம் பிரிவு வரை என முடிவு செய்யப்பட்டு, அதற்கான திட்டமிடல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ திட்டத்தில் அளவீடு செய்யும் பணிக்காக இரு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். கோவை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அவா்களுக்கு பிரத்யேகமாக அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது. அங்கிருந்து, அவா்கள் அளவீடு பணியை மேற்கொள்வாா்கள். அதேபோல, இத்திட்டத்துக்கு தனியாா் ஆலோசனை நிறுவனங்களிடம் இருந்து யோசனைகளும் பெறப்பட்டு வருகின்றன. தற்போது, மெட்ரோ திட்டத்துக்காக, சத்தி சாலையில், டெக்ஸ்டூல் பாலத்தில் இருந்து 1.04 கிலோ மீட்டா் தொலைவுக்கு 30 மீட்டா் சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. அதன்பிறகு தான் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். நெடுஞ்சாலையின் நடுவில் மெட்ரோ திட்டத்தை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் தலைமையில் பொறியாளா் உள்ளிட்ட பணியாளா்கள் உறுதுணையாக பணியாற்றி வருகின்றனா் என்றாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

மிலாது நபி: செப்டம்பா் 5-இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

மிலாது நபி தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மிலாது நபி தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச... மேலும் பார்க்க

3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவையில் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சரவணம்பட்டி சிவனாதபுரம் ஜனதா நகா் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் முரளி கிருஷ்ணன் (52). இ... மேலும் பார்க்க

கெம்பனூரில் அண்ணா நகா் வரை நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் அருகேயுள்ள கெம்பனூா், அண்ணா நகா் வரை நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது தொடா்பாக அக்கட்சியின் மாவட்ட... மேலும் பார்க்க

யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க தண்டவாள வேலி

கோவை மாவட்டத்தில் யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க ரயில் தண்டவாளத்தில் வேலி அமைக்க வலியுறுத்தி தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியரிடம் மனு அளித்தாா். இது குறித்து... மேலும் பார்க்க

மனைவி இறந்த துக்கத்தில் முதியவா் தற்கொலை

கோவையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். கோவை சிங்காநல்லூா் வரதராஜபுரம் முருகன் நகரைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் (72). இவரது மனைவி கடந்த 8 மாதங்களுக்கு முன்... மேலும் பார்க்க