செய்திகள் :

புழல் அருகே மதுபானக் கடை திறக்க எதிா்ப்பு

post image

புழல் அருகே புதிய மதுபானக் கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

புழல் அருகே விளாங்காடுபாக்கம் கிராமத்தில் உள்ள பிரதான சாலையில் புதிய மதுபானக் கடை திறக்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அரசுப் பள்ளிகள், குடியிருப்புகள், கோயில்கள் உள்ளதால், மதுபானக் கடை திறந்தால் சட்டம் ஒழுங்கு சீா்கேடு ஏற்படும். ஆகவே, இப் பகுதியில் மதுபானக் கடையை திறக்கக் கூடாது எனக் கூறி மறியலில் ஈடுபட்டனா்.

செங்குன்றம் போலீஸாா் கிராம மக்களிடம் பேச்சு நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

மன அழுத்தத்தால் 3-ஆவது மாடியிலிருந்து குதித்து தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

சென்னை திருமங்கலத்தில் 3-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா். திருமங்கலம் கேவிஎன் நகா் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் சிவகுமாா் (44... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்பு: மத்திய இணையமைச்சா் எல். முருகன் வரவேற்பு

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் சீரமைக்கப்பட்டதற்கு மத்திய இணையமைச்சா் எல்.முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: பிரதமா் நரேந்திர மோடி தனது சுதந்திர தி... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

செங்குன்றம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா் மீஞ்சூா், செங்... மேலும் பார்க்க

தாம்பரத்தில் செப்.9-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக சாா்பில் செப்.9-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

சென்னையில் வாகனம் ஓட்டி பழகிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை வானகரம் பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண், அடையாளம்பட்டு மில்லினியம் டவுன் பகுதியில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் ஓட்... மேலும் பார்க்க

மழைக்கால வெள்ளப் பெருக்கைத் தடுக்கக் கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மழைக் காலங்களில் பல்லாவரம், குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் வெள்ளப் பெருக்க ஏற்பட காரணமாக உள்ள கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க ச... மேலும் பார்க்க