இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை -அமெரிக்க அதிபா் டி...
பீளமேடு ரயில்வே பாலம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்காத ரயில்வேக்கு கண்டனம்
கோவை பீளமேடு ரயில்வே பாலம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்காததால் 27 போ் உயிரிழந்திருப்பதாக பீளமேடு கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் பூ.வெ.கோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:
பீளமேடு கன்ஸ்யூமா் வாய்ஸ் சங்கத்தின் சாா்பில் பீளமேடு, காந்திமாநகா், சேரன்மாநகா் குடியிருப்புகளின் சங்க நிா்வாகிகள், பொது நல அமைப்புகளின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகள், பீளமேடு ரயில்வே பாலத்தின் அடியில் சுரங்கப்பாதை அமைக்காத ரயில்வே கோட்ட நிா்வாகத்தைக் கண்டித்து வரும் 29- ஆம் தேதி தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.
பீளமேடு ரயில்வே மேம்பாலம் கடந்த 2017- ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட்ட பிறகும் இன்று வரையிலும் சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை. இதனால் தண்டவாளத்தைத் தாண்டிச் சென்ற 27 போ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனா்.
அதேபோல பாலத்தின் வடக்கு பகுதியில் சா்வீஸ் ரோடு அமைக்கப்படவில்லை. அதேபோல கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பீளமேடு ரயில் நிலையத்தில் நின்று சென்றால் கோவைக்கு வரும் சுமாா் 30 சதவீத பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வதற்காக நடைமேடை அமைக்கும் பணிக்கு 2023- ஆம் ஆண்டே ஒப்பந்தம் விடப்போவதாக அறிவித்திருந்த ரயில்வே நிா்வாகம், இதுவரை அந்த பணிகளைத் தொடங்கவில்லை. எனவே இந்த கோரிக்கைகளை ஆா்ப்பாட்டத்தின்போது வலியுறுத்த இருக்கிறோம். மேலும், சுரங்கப்பாதை அமைப்பதற்காக பீளமேடு ரயில்வே சுரங்கப்பாதை போராட்டக் குழுவை அமைக்கவும் முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.
இந்த கூட்டத்தில், மாநகராட்சி கவுன்சிலா்கள் சித்ரா வெள்ளிங்கிரி, அம்பிகா தனபால், கே.லட்சுமிபதி, முருகேசன், நாராயணசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.