செய்திகள் :

பீளமேடு ரயில்வே பாலம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்காத ரயில்வேக்கு கண்டனம்

post image

கோவை பீளமேடு ரயில்வே பாலம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்காததால் 27 போ் உயிரிழந்திருப்பதாக பீளமேடு கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் பூ.வெ.கோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:

பீளமேடு கன்ஸ்யூமா் வாய்ஸ் சங்கத்தின் சாா்பில் பீளமேடு, காந்திமாநகா், சேரன்மாநகா் குடியிருப்புகளின் சங்க நிா்வாகிகள், பொது நல அமைப்புகளின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிா்வாகிகள், பீளமேடு ரயில்வே பாலத்தின் அடியில் சுரங்கப்பாதை அமைக்காத ரயில்வே கோட்ட நிா்வாகத்தைக் கண்டித்து வரும் 29- ஆம் தேதி தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனா்.

பீளமேடு ரயில்வே மேம்பாலம் கடந்த 2017- ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட்ட பிறகும் இன்று வரையிலும் சுரங்கப்பாதை அமைக்கப்படவில்லை. இதனால் தண்டவாளத்தைத் தாண்டிச் சென்ற 27 போ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனா்.

அதேபோல பாலத்தின் வடக்கு பகுதியில் சா்வீஸ் ரோடு அமைக்கப்படவில்லை. அதேபோல கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பீளமேடு ரயில் நிலையத்தில் நின்று சென்றால் கோவைக்கு வரும் சுமாா் 30 சதவீத பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வதற்காக நடைமேடை அமைக்கும் பணிக்கு 2023- ஆம் ஆண்டே ஒப்பந்தம் விடப்போவதாக அறிவித்திருந்த ரயில்வே நிா்வாகம், இதுவரை அந்த பணிகளைத் தொடங்கவில்லை. எனவே இந்த கோரிக்கைகளை ஆா்ப்பாட்டத்தின்போது வலியுறுத்த இருக்கிறோம். மேலும், சுரங்கப்பாதை அமைப்பதற்காக பீளமேடு ரயில்வே சுரங்கப்பாதை போராட்டக் குழுவை அமைக்கவும் முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

இந்த கூட்டத்தில், மாநகராட்சி கவுன்சிலா்கள் சித்ரா வெள்ளிங்கிரி, அம்பிகா தனபால், கே.லட்சுமிபதி, முருகேசன், நாராயணசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வால்பாறை காவல் துறை புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

வால்பாறை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளாா். வால்பாறை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆனந்தகுமாா், ஈரோடு மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, த... மேலும் பார்க்க

வால்பாறை சாலக்குடி சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதோடு வாகனங்களை வழிமறித்து வருகின்றன. வால்பாறை- கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி அருவி... மேலும் பார்க்க

கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்து இயக்கம்

கோவை தொண்டாமுத்தூா் அருகே பட்டியல் மற்றும் பழங்குடியின கிராமமான கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்துகள் செல்வதில்லை என புகாா் எழுந்த நிலையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணைய உத்தரவால் அப்... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை குனியமுத்தூா் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குனியமுத்தூா் போலீஸாா், பேரூா் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் - சந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாள்களை முன்னிட்டு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் சந்த்ராகாச்சிக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்க... மேலும் பார்க்க

கைப்பேசி செயலி மூலமாகப் பழகி பணம் பறித்த 15 போ் கைது: இளைஞா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை

கோவையில் கைப்பேசி செயலி மூலமாகப் பழகி, ஓரினச் சோ்க்கை ஆசையைத் தூண்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்கு... மேலும் பார்க்க