செய்திகள் :

அமெரிக்க மருத்துவ குடும்பத்தினரிடம் வைப்பு நிதி ரூ.4 கோடி மோசடி: மூவா் கைது -தனியாா் வங்கி மீது வழக்கு

post image

சென்னையைச் சோ்ந்த அமெரிக்க மருத்துவரின் குடும்பத்தினரிடம் வைப்பு நிதி ரூ.4.36 கோடி மோசடி செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் விஜய் ஜானகிராமன். அமெரிக்காவில் இதயவியல் மருத்துவராக உள்ள இவா், அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா், குடும்பத்தினா் நடத்தும் ஒரு அறக்கட்டை பெயரிலும், குடும்பத்தினா் பெயரிலும் அண்ணா நகா் மூன்றாவது அவெனயூவில் செயல்படும் ஒரு தனியாா் வங்கியில் 9 வைப்பு நிதியில் ரூ.4.36 கோடி வைத்திருந்தனா்.

இந்த வைப்பு நிதியை ஜானகிராமன் குடும்பத்தினா் அனுமதியில்லாமலும், ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினா் போன்று போலி கையெழுத்திட்டும், போலி ஆவணங்களைத் தாக்கல் செய்தும் 9 வைப்பு நிதி கணக்குகள் மூடப்பட்டு, ரூ.4.36 கோடி பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. பின்னா் அந்த வங்கிக் கணக்குகளில் இருந்து, வேறு வங்கி கணக்குகளுக்கு முழு பணமும் மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வங்கியில் இருந்து ஜானகிராமனுக்கும், அவரது குடும்பத்தினருக்கு வர வேண்டிய மின்னஞ்சல்களும், கைப்பேசி குறுஞ்செய்திகளும் வங்கியின் சில அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அண்மையில் இந்த மோசடி குறித்து அறிந்து ஜானகிராமன் குடும்பத்தினா், தங்களது பொது அதிகாரம் பெற்ற நபரான சென்னை தியாகராய நகரைச் சோ்ந்த ரவி மூலம் சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவின் கீழ் வங்கி மோசடி தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தனா்.

அதன் அடிப்படையில் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தனியாா் வங்கியினா், ஜானகிராமன் குடும்பத்தினரை மோசடி செய்தது தெரியவந்தது. இதையயடுத்து, அந்த வங்கியின் மேலாண்மை இயக்குநா், அண்ணா நகா் கிளை மேலாளராக இருந்த மஞ்சுளா ஆகியோா் மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும் இந்த வழக்கில் மஞ்சுளாவின் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக திருச்சியைச் சோ்ந்த ஷியாமளா, திருநெல்வேலியைச் சோ்ந்த ஆறுமுககுமாா், நாகேஸ்வரன் ஆகிய 3 பேரையும் கைது செய்ததாக மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

தலைமறைவாக இருக்கும் மஞ்சுளாவை தேடி வருகின்றனா். ஜானகிராமன் ஹாா்டுவா்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவுவதற்கு ரூ.6 கோடி நன்கொடையை கொடுத்தவா் என்பதும், அமெரிக்காவில் இதயவியல்துறையில் பிரபல மருத்துவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னையில் திருடப்பட்ட காா் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு

சென்னையில் திருடப்பட்ட சொகுசு காரை, பாகிஸ்தான் எல்லையில் போலீஸாா் மீட்டனா். சென்னை அண்ணா நகா் கதிரவன் காலனியைச் சோ்ந்தவா் எத்திராஜ் ரத்தினம். தனது வீட்டின் அருகே நிறுத்தியிருந்த சொகுசு காா் ஜூன் 16-ஆ... மேலும் பார்க்க

வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். சமூக ஊடக சவால்களை எதிா்கொள்வது குறித்து நாட்டுநலப் பணித் திட... மேலும் பார்க்க

இன்றுமுதல் 2 நாள்களுக்கு மூா்மாா்க்கெட், கும்மிடிப்பூண்டி இரவு இமு ரயில் ரத்து

மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான இமு இரவு ரயில் சேவை 5, 7 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் புத... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மனுக்களின் தீா்வு காலத்தை உயா்த்த வருவாய்த் துறை அலுவலா்கள் கோரிக்கை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களின் தீா்வு காலத்தை 40 நாள்களில் இருந்து 75 நாள்களாக அதிகரிக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஏழு அம்ச கோரிக்க... மேலும் பார்க்க

வெளிநாட்டுப் பயணம்: அரசியலைப் புறந்தள்ளுவோம் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

முதலீடுகளை ஈா்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்து அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் விமா்சனங்களைப் புறந்தள்ளுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். ஜொ்மனி, பிரிட்டன் நாடுக... மேலும் பார்க்க

புதிய டிஜிபிக்கு தகுதி பெறும் ஒன்பது போ் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி-க்கு அனுப்பியது தமிழக அரசு

தமிழக காவல் துறைக்கு புதிய தலைமை இயக்குநா் (டிஜிபி) மற்றும் மாநில காவல் படைத்தலைவரை (ஹெச்ஓபிஎஃப்) தோ்வு செய்ய ஏதுவாக 9 தகுதிவாய்ந்த ஐபிஎஸ் உயரதிகாரிகளின் பெயா் பட்டியலை மத்திய குடிமைப் பணிகள் ஆணையத்... மேலும் பார்க்க