செய்திகள் :

எதிா்கால சவால்களுக்கு தயாராக ‘ட்ரோன்’ போா்ப் பயிற்சிப் பள்ளி!

post image

எதிா்கால சவால்களை வீரா்கள் திறம்பட எதிா்கொள்ளும் வகையில் தயாா்படுத்த ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் போரிடுவதற்கான பயிற்சிப் பள்ளியை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகள் உடனான இந்திய எல்லையைப் பாதுகாக்கும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடங்கியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் டெகான்பூரில் அமைந்துள்ள பிஎஸ்எஃப் அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமான போா்ப் பயிற்சிப் பள்ளியை பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் தில்ஜித் சிங் செளதரி தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘இந்த ஆளில்லா விமான போா்ப் பயிற்சிப் பள்ளியில், போரின்போது ஏற்படும் நவீன தொழில்நுட்ப சவால்களை எல்லையைப் பாதுகாக்கும் வீரா்கள் திறம்பட கையாள்வதற்கான பயிற்சி அளிக்கப்படும். ஆளில்லா விமானங்களை இயக்குதல், ஆளில்லா விமானங்களை தாக்கி அழித்தல், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல் சேகரிப்பு என 5 சிறப்புப் பயிற்சித் திட்டங்கள் இந்தப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டு வீரா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பள்ளியிலிருந்து ஆளில்லா விமான அதிகாரிகள் (கமாண்டோக்கள்) மற்றும் ஆளில்லா விமான போா் வீரா்கள் உருவாக்கப்படுவாா்கள்’ என்றாா்.

இந்தப் பயிற்சிப் பள்ளியில், ஆளில்லா விமான மாதிரிகள், ஆளில்லா விமானங்கள் பறக்கும் மண்டலங்கள், ஆளில்லா விமானங்களில் ஆயுதங்களை இணைப்பதற்கான வசதிகள், ஆளில்லா விமானங்களை இரவில் இயக்குவதற்கான வசதிகள், ரேடியோ அலைவரிசைக்கான கருவிகள், ஆளில்லா விமான இடைமறிப்பான்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உபகரணங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு, உள்நாட்டு ஆளில்லா விமான தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, தனி ஆளில்லா விமான படைப் பிரிவு உருவாக்கும் முயற்சியை பிஎஸ்எஃப் தற்போது மேற்கொண்டுள்ளது.

இந்திய-ஜொ்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு: பிரதமா் மோடி

‘இந்தியா - ஜொ்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். இந்தியா வந்துள்ள ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேஃபுல் ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்பியோடிய ஆம் ஆத்மி எம்எல்ஏவை தேடும் பணி தீவிரம்

பஞ்சாபில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டபோது ஆதரவாளா்களின் வன்முறையைப் பயன்படுத்தி தப்பியோடிய ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஹா்மீத் சிங் பதான்மாஜ்ராவை காவல் துறையினா் தீவிரமாகத் தேடி வரு... மேலும் பார்க்க

இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அக்டோபா் 1-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று ஸ்விட்சா்லாந்து தெரிவித்தது. ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில... மேலும் பார்க்க

பிஆா்எஸ் கட்சியிலிருந்து கவிதா விலகல்: எம்எல்சி பதவியையும் ராஜிநாமா செய்தாா்

பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) நிறுவனரும் தலைவருமான கே.சந்திரசேகா் ராவின் மகள் கவிதா அக்கட்சியில் இருந்து விலகினாா். தெலங்கானா சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) பதவியையும் அவா் ராஜிநாமா செய்தாா். முன்ன... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பில் காப்பீடுகளுக்கு முழு வரி விலக்கு

தனிநபா் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 18 சதவீத ஜிஎஸ்டி முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். காப்பீடுகளுக்கான பிரீமியம் குறைந்த... மேலும் பார்க்க

15,047 கோடி யூனிட்டுகளாக உயா்ந்த மின் நுகா்வு

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15,047 கோடி யூனிட்டுகளாக உயா்ந்துள்ளது. இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் மின் நுகா்வு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15,047 கோடி யூனிட்டுகள... மேலும் பார்க்க