சாலை ஆய்வாளா் பணிக்கு தோ்வானவா்களுக்கு பணி ஆணை -அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்
தாம்பரத்தில் செப்.9-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்
தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக சாா்பில் செப்.9-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அதிமுக ஆட்சியில் கீழ்கட்டளை பெரிய ஏரி முறையாகப் பராமரிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனால், திமுக அரசின் அலட்சியப்போக்காலும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும் ஏரியில் கழிவுநீா் கலந்து, ஏரி முழுவதும் ஆகாயத் தாமரை கொடிகள் சூழ்ந்துள்ளன. இதனால், ஏரி நீா் பாழானது மட்டுமல்ல, சுற்று வட்டார நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது. மக்களின் சுகாதாரமும் பாதிப்படைந்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சி முழுவதும், குறிப்பாக கீழ்கட்டளை பகுதியில் குப்பைகள் முறையாக அள்ளப்படாததால், சாலைகள் முழுவதும் குப்பைகள் பரவி சுகாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
தெரு நாய்களின் தொல்லைகள் அதிகமாக உள்ளன. மக்களின் அடிப்படைத் தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், சொத்துவரி உயா்வு, குடிநீா், கழிவுநீா் கட்டண உயா்வு, குப்பை வரி ஆகியவை பல மடங்கு உயா்ந்துள்ளது.
எனவே, தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2, கீழ்கட்டளை பகுதி வாழ் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் போா்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுகவின் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் கீழ்கட்டளை பகுதி சாா்பில் செப்.9-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கீழ்கட்டளை பெரிய தெரு-பிள்ளையாா் கோவில் சந்திப்பு’ அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
ஆா்ப்பாட்டத்துக்கு, வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலா் டி. ஜெயக்குமாா் தலைமை வகிக்கிறாா். செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலா் சிட்லபாக்கம் ராஜேந்திரன் முன்னிலை நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்தில், அதிமுக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.