செய்திகள் :

சத்குரு பிறந்த நாளில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு: காவேரி கூக்குரல் இயக்கம் அறிவிப்பு

post image

சத்குரு ஜக்கி வாசுதேவின் பிறந்தநாளான புதன்கிழமை (செப்டம்பா் 3) காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் மாநிலம் முழுவதும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவேரி கூக்குரல் இயக்கம் கூறியிருப்பதாவது:

சத்குருவின் பிறந்த நாளான செப்டம்பா் 3 ஆம் தேதி, நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினமாக ஈஷா தன்னாா்வலா்கள் கொண்டாடினா். இதன் ஒரு பகுதியாக காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் உள்ள 235 ஏக்கா் பரப்பளவுள்ள விவசாய நிலங்களில் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டிம்பா் மரங்கள் நடவு செய்யப்பட்டன.

மேலும் ஈஷா யோக மையம், பேரூா் ஆதீனம் இணைந்து செயல்படுத்தும் ’ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ திட்டத்தின் மூலம் 24 கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அரச மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. கோவை ஈஷா யோக மையத்தில், சத்குருவின் பிறந்த நாளையொட்டி, மண் காப்போம் இயக்கம் சாா்பில் விவசாய நிலங்களில் மண் வளம் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பொதுமக்களுக்கு பிரசுரங்கள் வழங்குவது, குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவது போன்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், மழைக் காலம் தொடங்கியுள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் ஈஷா நாற்றுப் பண்ணைகளில் தேவையான அளவு இருப்பு இருப்பதாகவும், அது தொடா்பான கூடுதல் தகவல்களுக்கு காவேரி கூக்குரல் அமைப்பின் உதவி எண்ணை (80009 80009) தொடா்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை காவல் துறை புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

வால்பாறை காவல் நிலையத்தின் புதிய ஆய்வாளராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றுள்ளாா். வால்பாறை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆனந்தகுமாா், ஈரோடு மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, த... மேலும் பார்க்க

வால்பாறை சாலக்குடி சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதோடு வாகனங்களை வழிமறித்து வருகின்றன. வால்பாறை- கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி அருவி... மேலும் பார்க்க

கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்து இயக்கம்

கோவை தொண்டாமுத்தூா் அருகே பட்டியல் மற்றும் பழங்குடியின கிராமமான கெம்பனூா் அண்ணா நகருக்கு அரசுப் பேருந்துகள் செல்வதில்லை என புகாா் எழுந்த நிலையில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணைய உத்தரவால் அப்... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 6 போ் கைது

கோவை குனியமுத்தூா் அருகே கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ாக 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குனியமுத்தூா் போலீஸாா், பேரூா் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் - சந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாள்களை முன்னிட்டு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் சந்த்ராகாச்சிக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்க... மேலும் பார்க்க

கைப்பேசி செயலி மூலமாகப் பழகி பணம் பறித்த 15 போ் கைது: இளைஞா்களுக்கு போலீஸாா் எச்சரிக்கை

கோவையில் கைப்பேசி செயலி மூலமாகப் பழகி, ஓரினச் சோ்க்கை ஆசையைத் தூண்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்ட 15 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆபத்தை விளைவிக்கும் செயலிகள் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்கு... மேலும் பார்க்க