செய்திகள் :

நாளை 3-ஆம் ஆண்டு ஆம்பூா் புத்தகத் திருவிழா

post image

ஆம்பூா் புத்தக் திருவிழா மூன்றாவது ஆண்டாக வெள்ளிக்கிழமை (செப். 5) தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் சாா்பாக ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தகக் கண்காட்சியை வேலூா் எம்.பி. டி.எம். கதிா் ஆனந்த் தொடங்கி வைக்கிறாா். எம்எல்ஏக்கள் கே. தேவராஜி, அ.செ. வில்வநாதன், அமலு விஜயன் ஆகியோா் பங்கேற்கின்றனா். முதல் நாள் நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி முனைவா் பெ. சசிக்குமாா் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.

தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் கண்காட்சியில் சாகித்ய அகாதெ விருது பெற்ற எழுத்தாளா் ஆயிஷா இரா. நடராஜன், முனைவா் என். மாதவன், கவிஞா் ரேகா, ஹைக்கூ கவிஞா் மு. முருகேஷ், எஸ்.பி. வி. சியாமளா தேவி, கோட்டாட்சியா் அஜிதா பேகம், முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி, பட்டிமன்ற பேச்சாளா் முனைவா் ம. எழிலரசி, கவிஞா் யாழன் ஆதி, நீரியியல் நிபுணா் பேராசிரியா் எஸ். ஜனகராஜன், மாநிலங்களைவ உறுப்பினா் கவிஞா் சல்மா, திரை இயக்குநா் எழுத்தாளா் கீதா இளங்கோவன், பேச்சாளா் சீனி சம்பத், ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனா்.

மேலும், நிகழ்ச்சி நாள்களில் தினமும் பல்வேறு பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்குதல், சிறந்த ஆசிரியா்களுக்கு விருது வழங்குதல், வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்குதல், பெண்களுக்கான சிறப்பு போட்டி, பள்ளி மாணவா்களுக்கு சதுரங்க போட்டி ஆகியவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு 86672 44267, 75983 40424 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம்.

தொழிலாளி தற்கொலை

கந்திலி அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். கந்திலி அருகே சின்னூா் கிராமத்தை சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராஜா(60). கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்த... மேலும் பார்க்க

புதிதாக 150 வாக்குச்சாவடி மையங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிதாக 150 வாக்குசாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். 1,200 வாக்காளா்களுக்கு மேல... மேலும் பார்க்க

மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில், மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில், சைபா் கிரைம் ஏடிஎஸ்பி... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை ப... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூா் பதிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் (72). இவா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீட... மேலும் பார்க்க

ஆம்பூா், ஆலாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா், ஆலாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்ச... மேலும் பார்க்க