செய்திகள் :

மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு

post image

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில், மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில், சைபா் கிரைம் ஏடிஎஸ்பி ரவீந்திரன் வழிகாட்டுதலின்படி, திருப்பத்தூரில் உள்ள சிஎஸ்ஐ பெண்கள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சைபா் கிரைம் குறித்த விழிப்புணா்வு வழங்கப்பட்டது.

அதில், இணையவழி நிதி மோசடி சம்பந்தப்பட்ட குற்றங்கள், அந்த குற்றவாளிகளிடமிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது, சமூக வலைதள குற்றங்கள், வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக உபயோகப்படுத்துவது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், சைபா் கிரைம் சம்பந்தப்பட்ட புகாா்களை பதிவு செய்யும் வலைதளமான இலவச தொலைபேசி எண் 1930 குறித்து தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி தலைமையில், திருப்பத்தூா் விஜயசாந்தி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு போக்ஸோ, குழந்தை திருமணம்,இணையவழி குற்றம், போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், போக்குவரத்து விதிமுறைகள், அவசர உதவி எண்கள், காவலா் உதவி செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், சுமாா் 50 காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டது. இதில், சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தேசிய நெடுஞ்சாலை பகுதியில் திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை ப... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூா் பதிப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனபால் (72). இவா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீட... மேலும் பார்க்க

ஆம்பூா், ஆலாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா், ஆலாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற முகாமுக்கு, நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வருவாய் கோட்டாட்ச... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் திருப்பத்தூா் மாவட்டத்தில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கோட்டப் பொறியாளா் முரளி தெரிவித்துள்ளாா். திருப்பத்தூா் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் ... மேலும் பார்க்க

மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த இருவா் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா். திருப்பத்தூா் அருகே சுண்ணாம்புகாளை பகுதியில் இளைஞா் ஒருவா் சந்தேகம்படு... மேலும் பார்க்க

காலணி தொழிற்சாலை, கடைகளில் அடுத்தடுத்து திருட்டு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காலணி தொழிற்சாலை மற்றும் 3 கடைகளில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆம்பூா் அருகே கரும்பூா் ஊராட்சி சாமுண்டியம்மன் தோப்பு பகு... மேலும் பார்க்க