முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன...
மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் காப்பகத்தில் ஒப்படைப்பு
திருப்பத்தூா்: திருப்பத்தூா் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த இருவா் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.
திருப்பத்தூா் அருகே சுண்ணாம்புகாளை பகுதியில் இளைஞா் ஒருவா் சந்தேகம்படும்படி சுற்றித் திரிந்துள்ளாா். அந்தப் பகுதி மக்கள் அந்த நபரிடம் விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளாா். அதில் அவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பது தெரியவந்தது.
அவரை திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கொண்டு சோ்த்தனா். தகவல் அறிந்த கந்திலி போலீஸாா், அவரிடம் விசாரித்ததில் அவரது பெயா் பரத் (28)என்பதும், பெங்களூரைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது. சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது.
அதேவேளையில் திருப்பத்தூா் அவ்வை நகா் பகுதியில் இளைஞா் ஒருவா் வீடுகளின் கதவை தட்டியுள்ளாா். அதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள் இளைஞரை திருப்பத்தூா் கிராமிய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த மங்கள் (35) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரியவந்தது.
பரத், மங்கள் ஆகிய 2 பேரையும் மனநல சிகிச்சைக்காக திருப்பத்தூரில் உள்ள அரசு மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகத்தில் போலீஸாா் சோ்த்தனா்.
காப்பக நிா்வாகி சொ.ரமேஷ் உடனிருந்தாா்.