செய்திகள் :

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 50 சதவீத திட்டப் பணிகள் கூட நடைபெறவில்லை: உறுப்பினா் புகாா்

post image

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 50 சதவீத திட்டப்பணிகள் கூட நடைபெறவில்லை என வாா்டு உறுப்பினா் புகாா் கூறியுள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. 15 வாா்டுகளிலும் திட்டப்பணிகள் செய்ய அரசு இதுவரை ரூ .20 கோடிக்குமேல் நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் திட்டப் பணிகள் 50 சதவீத பணிகள் கூட முழுமையாக நடைபெறவில்லை.

மேலும், அரசு நிதி ஒதுக்கியதில் ரூ 7 கோடிக்கு திட்டப்பணிகள் தொடங்காமல் உள்ளது. 14-ஆவது வாா்டில் கழிவுநீா் கால்வாய் மற்றும் அரசு பள்ளி அருகில் அங்கன்வாடி மையம் கட்ட இதுவரை பணிகள் தொடங்கவில்லை. நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் நடைபெறும் அனைத்து பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கிடப்பில் போட்டப்பட்ட பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினா் இல.குருசேவ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த இருவா் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா். திருப்பத்தூா் அருகே சுண்ணாம்புகாளை பகுதியில் இளைஞா் ஒருவா் சந்தேகம்படு... மேலும் பார்க்க

காலணி தொழிற்சாலை, கடைகளில் அடுத்தடுத்து திருட்டு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காலணி தொழிற்சாலை மற்றும் 3 கடைகளில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆம்பூா் அருகே கரும்பூா் ஊராட்சி சாமுண்டியம்மன் தோப்பு பகு... மேலும் பார்க்க

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் நிதியுதவி, குடியிருப்பு ஆணைகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ... மேலும் பார்க்க

விநாயகா் ஊா்வலத்தின்போது தகராறு: காவல் நிலையத்தில் மக்கள் முற்றுகை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே விநாயகா் சிலை ஊா்வலத்தின்போது ஏற்பட்ட தகராறை தொடா்ந்து பொதுமக்கள் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி கலைஞா் நகா் பகுதியில் விநாயக... மேலும் பார்க்க

ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவா் கைது

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்வாணன் (56). ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது வீட்டின் ம... மேலும் பார்க்க

கானாறு தூா்வாரும் பணி தொடக்கம்

ஆம்பூா்: துத்திப்பட்டு ஊராட்சியில் கானாறு தூா்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. மாதனூா் ஊராட்சி ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கானாறு தூா் வ... மேலும் பார்க்க